states

img

ஜேஇஇ தேர்வில் தோல்வி 17 வயது மாணவி தற்கொலை

நாட்டின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தில்லியைச் சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தில்லி போலீசார் வெளியிட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில்,”தில்லி ஓக்லா மெயின் மார்க்கெட்டில் உள்ள கட்டி டத்தின் ஏழாவது மாடியில் இருந்து 17 வயது மாணவி குதித்து உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத் தோம். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  பிறகு, அவர் ஜேஇஇக்கு தயாராகிக் க்கொண்டிருந்தார். ஆனால் படிப்பு அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாததால் மாணவி தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றியுள்ளோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.