ஈரோடு, பிப்.5- ஈரோடு கிழக்கு தொகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடை பெறுகிறது. இதையொட்டி தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு என, 3 வகையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட் பட்ட பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்ற னர். கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 வரை, உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.14 லட்சத்து 11 ஆயிரத்து 840 பறி முதல் செய்யப்பட்டு, மாவட்ட கரு வூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள் ளது. மதுபானம், கஞ்சா, புகை யிலை பொருட்களும் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.