8 ஆண்டுகளாகியும் ‘நல்ல நாள்’ வருவதாக இல்லை!
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து மே 30-ஆம் தேதியுடன் 8 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கவிதா, பொருளா தாரம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு 8 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். மோடி ஆட்சியில், ஒரே ஒரு ஜிடிபி (கேஸ், டீசல், பெட்ரோல்- GDP) மட்டுமே உயர்ந்து கொண்டே போவதாகவும், இந்தியாவின் ஜிடிபி சரிவதாகவும் குற்றம்சாட்டியுள்ள கவிதா, ‘அச்சே தின்’ (நல்ல நாள்) என்ற பாஜக-வின் கொள்கைப்படி, அந்த நல்ல நாளை மக்கள் எப்போதாவது பார்ப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவு பெற்றன!
தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்க்கான அரசுப் பொதுத்தேர்வுகள் கடந்த மே 6-ஆம் தேதி தொடங்கின. தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளி களில் 10-ஆம் வகுப்பு பயிலும் 9.55 லட்சம் மாணவ - மாணவியர் 3,936 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதி வந்தனர். இந்நிலையில், இந்த தேர்வுகள் திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றன. கடைசி நாளில் சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதைடுத்து, விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 2 முதல் 9 வரை நடைபெற உள்ளது.
மாநிலங்களவை தேர்தல்: மனுதாக்கலுக்கு இன்று கடைசி!
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி களுக்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் 3 இடங்களுக்கும், அதன் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் சார்பில் ஓரி டத்திற்கும், அதிமுக சார்பில் 2 இடங்களுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவிகள் முன்பு நிர்வாணம்: இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் இந்து மக்கள் கட்சி யின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், பள்ளி மாணவிகள் முன்பு ஆடையின்றி நிர்வாண மாக நின்றுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவிகள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரி வித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர், ராஜ்குமார் மீது பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 ஆண்டுக்குப் பின் மதுரை - இராமேஸ்வரம் ரயில்!
கொரோனா காலத்தில் இராமேஸ்வரம் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் ரயில் மே 30 முதல் மீண்டும் இயக்கப்படும் தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி திங்கட்கிழமை காலை 6:35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து இராமேஸ்வ ரத்திற்கு ரயில் புறப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கப்படும் இந்த ரயிலில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். காலையில் மதுரையில் இருந்து இராமேஸ் வரத்திற்கும் மாலையில் இராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கும் இரு மார்க்கத்திலும் தினமும் ஒரு முறை இயக்கப்படுகிறது.
எம்.பி. ஆக எனக்கு தகுதி இல்லையா? - நக்மா கேள்வி
“நான் கடந்த 2003-04 ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தபோது மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என தலைவர் சோனியாக காந்தி உறுதி அளித்திருந்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனால் 18 வருடங்கள் ஆகியும் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆனால் இம்ரானுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனக்கு மாநிலங்க ளவை உறுப்பினர் ஆவதற்கு தகுதி இல்லையா?” என்று மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செய லாளரும், திரைக்கலைஞருமான நக்மா டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவ்னீத் கவுர் எம்.பி. மீது மீண்டும் வழக்குப்பதிவு!
பாஜக தூண்டுதல் பேரில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டு முன்பு ஹனு மன் சாலீசா பாடப்போவதாக அறிவித்த, அமராவதி தொகுதி சுயேட்சை எம்.பி. நவ்னீத் கவுர் மற்றும் அவரது கணவரும், எம்எல்ஏ-வுமான ரவி ராணா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23 அன்று கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், 36 நாட்க ளுக்குப் பிறகு, அமராவதிக்கு திரும்பிய அவர்கள், பல இடங்களில் போக்குவரத்தை சீர்குலைத்ததாக வும், இரவு 10 மணிக்கு மேலும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலை யில், மீண்டும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.