சென்னை,ஏப்.11- தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 10 அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிஅறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்களன்று(ஏப்.11) உயர்க் கல்விதுறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் க.பொன்முடி,“கிராமப்புற மாணவர்களுக்கு அரசு கல்லூரிகள் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றன. எனவே, அரசு கல்லூரிகளின் தேவை அதிகரித்துள்ளதால் திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி கி,புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் ஆகிய பத்து இடங்களில் ரூ.166.50 கோடியில் 10 புதிய அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகள் துவங்கப்படும்” என்றார். பரக்குடியில் இருபாலரும் பயிலும் அரசுக் கல்லூரிகள் உள்ளன. கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில் 201920 ஆம் ஆண்டில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூ ரியாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் 4,800 மாணாவர்ளும் 500 முனைவர் பட்ட ஆராய்ச்சி யாளர்களும் பயின்று வருகின்றனர்.
ஏற்கனவே உள்ள விடுதிகளில் இடப்பற்றாக்குறை இருப்பதால், மாணவர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் ரூ.19.50 கோடியில் புதிய விடுதி கட்டப்படும். சென்னை யில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவிகளுக்கு விடுதி கட்டப்படும். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் முதுகலை மாணவி களுக்கு இரண்டு விடுதிகள் கட்டப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் புதிதாக மகளிர் விடுதி கட்டப்படும். பல்கலைக்கழக மாணாக்கர்களின் தொழிற்திறன்களை மேம்படுத்த புதிய பாடப்பிரிவு அறிமுகப் படுத்தப்படும். பணிபுரியும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயிலுவதற்கான திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்களிக்கப்படும். அரசு கல்லூரிகளில் முதுநிலை பயிலும் மாணாக் கர்கள் ஆராய்ச்சி படிப்பினை தொடர ஏதுவாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும். சிறைக் கைதிகள், திருநங்கை கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் கட்டணமின்றி பயின்று பட்டம் பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் உள்ளிட்ட 27 புதிய அறிவிப்புகளையும் அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.