states

img

டாணா புயல் ஒடிசாவில் 10 லட்சம் பேர் வெளியேற்றம்

கடந்த வாரம் வடக்கு அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக (டாணா) வலுப்பெற்றுள்ளது. இந்த “டாணா புயல் (கத்தார் நாட்டின் பெயர்)” வெள்ளியன்று அதிகாலை ஒடிஷா மாநிலத்தின் பிடர்கனிகா தேசிய  பூங்கா - தாம்ரா துறைமுகம் இடையே 70 கிமீ இடைவெளியில் 120 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வியா ழனன்று இரவு காற்றின் திசைவேகம் மாறினால் மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவு பகுதிகளிலும் “டாணா புயல்” கரையை கடக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் மற் றொரு எச்சரிக்கையையும் விடுத் துள்ளது. இந்நிலையில், “டாணா புயல்” கார ணமாக ஒடிசாவில் பள்ளி - கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து 10 லட்சம் பேரை அம்மாநில அரசு வெளியேற்றி மீட்புப் பணிக்கு தேவை யான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதே போல மேற்கு வங்க அரசு கொல் கத்தா விமான நிலையத்தை மூடியும், பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளித் தும் “டாணா புயலை” எதிர்கொள்வ தற்கான பணியை மேற்கொண்டு வருகிறது.  மெதுவாக நகருவது ஆபத்தானது “டாணா புயல்” மணிக்கு 10 முதல் 15 கிமீ வேகத்தில் மட்டுமே கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கரையை கடக்கும் பொழுது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி யுள்ளது. ஆனால் “டாணா புயலின்” நகர்வு மிக மெதுவாக இருப்பதால் கரை யை கடக்கும் பொழுது கூடுதலான வேகத்தில், பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என வானிலை தகவல் வெளி யாகியுள்ளது. புயல் மெதுவாக நகரு வது கூடுதல் ஆபத்தை விடுவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.