புதுதில்லி, பிப். 24 - ‘நீட்’ தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில், தாக்கல் செய்யப்பட்ட ‘ரிட்’ மனுவை திரும்பப்பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு எதிராக, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழ்நாடு அரசு புதி தாக தாக்கல் செய்துள்ள ‘முதன்மை மனு’ (ஒரிஜினல் சூட்) மீது விரைவில் விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் நீட் தேர்வை கட்டாயமாக்கி ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இளங்கலை மருத்துவப் படிப்பு களுக்கான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது குடி யரசுத் தலைவரின் பரிசீலனையில் இருப்பதை சுட்டிக்காட்டி ‘ரிட்’ மனு மீதான விசாரணையை ஆறு மாதத் திற்கு தள்ளி வைக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது. அந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை யன்று (பிப்ரவரி 24) மீண்டும் நடை பெற்றது. அப்பொழுது, அதிமுக ஆட்சியின்போது தாக்கல் செய்யப் பட்ட ரிட் மனுவை திரும்பப் பெறுவ தற்கு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, “இந்த விவகாரத்தில் எந்த அடிப்படையில் நீங்கள் ரிட் மனுவை முன்பு தாக்கல் செய்தீர்கள்? இந்த யோசனையை அளித்தது யார்?” என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜ ரான கூடுதல் தலைமை வழக்கறி ஞர், “இந்த ரிட் மனுவானது கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது” என்று தெரிவித்தார். “எந்த ஆட்சி யில் இருந்தாலும் ரிட் மனுவை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும்?” என நீதிபதிகள் வினவினர்.
பொதுவாக ஒன்றிய அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக முதன்மை (ஒரிஜினல் சூட்) (Original suit) மனுக்கள்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான அதிமுக அரசு, மோடி அர சுக்கு வலித்துவிடக் கூடாது என்றும், அதேநேரம் நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது என்று காட்டிக் கொள்வதற்காகவும், கடமைக்காக ஒரு ‘ரிட்’ (writ) மனுவை ‘நீட்’ விவகாரத்தில் தாக்கல் செய்திருந் தது. இது பொருத்தமற்றது என்ற அடிப் படையிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி வெள்ளியன்று கேள்வி எழுப்பினார். அதற்கு, நீட் தேர்வை கட்டாய மாக்கிய சட்டத் திருத்தத்திற்கு எதி ராக புதிய முதன்மை மனு பிப்ரவரி 18-ஆம் தேதி தாக்கல் செய்யப் பட்டுள்ளதால் அந்த மனுவை விசார ணைக்கு எடுத்துக் கொள்ளும் நிலை யில், இந்த ரிட் மனுவை நாங்கள் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டு மென்று தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்தை எதிர்த்து, அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்தது. முதன்மை மனு மீது விசாரணை விரைவில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. “மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அதிலும் குறிப்பாக நீட் தேர்வு கட்டாயம் என்பது ஒரு அதிகார வரம்பு மீறலும், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்துக் கும் எதிரான ஒன்று. அரசியலமைப்பு பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான சமத்துவத்துக்கும் எதி ரானது. மேலும், நீட்தேர்வு கட்டாயம் என்று அமல்படுத்தியது தமிழ்நாடு மாணவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று முதன்மை மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.