திருவனந்தபுரம் (எம்.சி.ஜோசபைன் நகர்), ஜன. 8- இருட்டுக்குள் ஒளி விளக்காக சுடரும் இடதுசாரி கேரளம் பெண்களின் உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கவும் பல பாராட்டத்தக்க நட வடிக்கைகளை எடுத்து வருகிறது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொது செயலாளர் மரியம் தாவ்லே கூறி னார். பெண்கள் மீதான இடது ஜனநாயக முன்னணி அரசின் நிலைப்பாடு முழு நாட்டிற்கும் எடுத்துக்காட்டு என்றும் அவர் கூறினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 13 ஆவது அகில இந்திய மாநா ட்டின் போது, செய்தியாளர்களை சந்தித்த அவர் மாநாட்டின் விவாதங்கள் மற்றும் நிலைப்பாடுகளை விளக்கி கூறியதாவது: மாநாட்டில் ஜம்மு-காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான 850 பிரதிநிதி கள் பங்கேற்றுள்ளனர்.
பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பிரச்சனைகளை அவர்கள் விவாதித்தனர். விலைவாசி உயர்வு, பொது விநியோக முறை சீர்குலைவு, எரிவாயு மானியத்தை படிப்படியாக நிறுத்துதல், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பெண்களிடையே அதிகரித்து வரும் நுண்கடன், கடன் நெருக்கடி போன்ற பிரச்சனைகளை பிரதிநிதிகள் எழுப்பினர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பொது இடங்களில் கூட அந்தி சாயும் பொழுது பெண்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். ஆண்களிடையே அதிகரிக்கும் போதைப் பழக்கம் பெண்களை கடுமையாக பாதிக் கிறது. மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெய ரால் பெண்களை குறிவைத்து இன ரீதியாக பிரிக்கும் செயல் நடைபெறுகிறது. பெண் களை பாதுகாப்பதற்கான எந்த சட்டமும் அமல்படுத்தப்படவில்லை. பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதிலும், குற்ற வாளிகளைப் பாதுகாப்பதிலும் பாஜக முக்கியப் பங்கு வகிக்கிறது. பத்திரிகை யாளர்கள் மீதான வன்முறை குறித்தும் விவா திக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்துரை
மாநாட்டில் அகில இந்திய அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தலை வர் ஏ. விஜயராகவன், இந்திய மாணவர் சங்க அகில இந்திய பொது செயலாளர் மயூக் பிஸ்வாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.