states

img

வயநாடு பெருமழை - நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் ஆய்வு!

திருவனந்தபுரம், ஆக. 10 -  கேரள மாநிலம், வயநாடு பகுதி யில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 அன்று அதிகாலை நிலச்  சரிவு ஏற்பட்டது. 

இதில், முண்டகை, சூரல்மலை,  அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன.  இதில், 427 பேர் வரை உயிரிழந் துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காண வில்லை. பாதிக்கப்பட்ட பகுதி களில் 11 நாட்களுக்கும் மேலாக மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாட்டில் பேரி டர் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று (ஆக. 10) நேரில் பார்வையிட்டார். 

இதற்காக தில்லியிலிருந்து, காலை 11 மணிக்கு கண்ணூர் சர்வ தேச விமான நிலையத்திற்கு பிரதமர்  மோடி வருகை தந்தார். அவரை கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான், முதல்வர் பினராயி விஜயன், ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் அவர்களுடன் ஹெலி காப்டரில் வயநாடு சென்ற பிரதமர்  மோடி, காலை 11.10 மணி முதல்  மதியம் 12.10 மணி வரை ஹெலிகாப்  டர் மூலமாகவே பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிட்டார்.

பின்னர், கல்பற்றா பள்ளி  அருகே ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, ராணுவத்தால் கட்டப்பட்ட பெய்லி பாலம் வழியாக நடந்து சென்று சூரல்மலை பகுதிகளை பார்வையிட்டார். நிலச்சரிவில் உயிரி ழந்தோருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேப்பாடி செயிண்ட் ஜோசப் பள்ளி நிவாரண முகாமில் தங்கி யிருப்பவர்களை நேரில் சந்தித்த  பிரதமர், தனியார் மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சையில் உள்ளவர்களையும் சந்தித்து ஆறு தல் கூறினார். 

மலை 4 மணிக்கு ஆட்சியர் அலு வலகத்தில் நிலச்சரிவு தொடர்பான  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆரிப் முகமதுகான்,  முதல்வர் பினராயி விஜயன், ஒன்  றிய இணையமைச்சர் சுரேஷ்கோபி,  மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரத மர் தில்லி திரும்பினார். பேரிடராக அறிவித்து வயநாட்டுக்கான சிறப்பு தொகுப்பு நிதி வழங்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்புடன் பிரதமரை கேரளம் வழியனுப்பியது.

தேசியப் பேரிடர் அறிவிப்பு இல்லை... பிரதமர் பயணம் கண்துடைப்பா?

பிரதமர் மோடி வயநாடு செல்வ தாக அறிவிக்கப்பட்டது முதலே, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்  சரிவு பாதிப்பை தேசியப் பேரிட ராக அறிவிக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்தது. ஹெலிகாப் டர் மூலமான ஆய்வுக்குப் பிறகு பிரதமரே இந்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என்றும் யூகங்கள் வெளியிடப்பட்டன.

ஆனால், அரசியல் கணக்கு களுக்காக- பெயரளவில் மட்டுமே  பிரதமர் மோடி வயநாடு பய ணத்தை மேற்கொள்கிறார்; மற்ற படி தேசியப் பேரிடர் அறிவிப்பெல் லாம் வரும் என்று யாரும் நம்பி  ஏமாந்து விட வேண்டாம் என்பதை  ஊடகங்கள் மூலமாக முன்கூட் டியே மோடி அரசு கசியவிட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டு  அப்போதைய காங்கிரஸ் தலை மையிலான ஒன்றிய அரசின் உள்  துறை இணையமைச்சராக இருந்த  கேரளத்தைச் சேர்ந்த முல்லப்  பள்ளி ராமச்சந்திரன் மக்களவை யில் பதில் ஒன்றை அளித்திருந் தார்.

அதில், “இயற்கைப் பேரிடரை  தேசியப் பேரழிவாக அறிவிக்க எந்த விதியும் இல்லை. கடுமை யான இயற்கை பேரிடரை அதன்  தீவிரம், அளவு, நிவாரண உதவி யின் அளவு, சிக்கலைச் சமாளிக்  கும் மாநில அரசின் திறன், மாற்று வழிகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு ஒவ்வொரு  சந்தர்ப்பத்திலும் கடுமையான இயற்கை பேரிடரை மதிப்பிடு கிறது. அதேநேரத்தில், இவ்விஷ யத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதி முறைகள் எதுவும் இல்லை. இருப்  பினும், கடுமையான இயற்கை பேரி டருக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதி யத்திலிருந்து (NDRF) கூடுதல்  உதவி அளிப்பது குறித்து பரிசீலிக் கப்படும். மற்றபடி இயற்கை பேரி டர்கள் ஏற்படும்போது தேவை யான மீட்பு மற்றும் நிவாரண நட வடிக்கைகளை மேற்கொள்வதில் முதன்மையான பொறுப்பு சம்பந்  தப்பட்ட மாநில அரசுகளுக்கே உள்  ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிலை ஊடகங்கள் மூல மாக மோடி அரசு தற்போது பரப்பி யதன் மூலம் மோடியின் வயநாடு பயணம் கண்துடைப்பாகவே பார்க்  கப்படுகிறது.