states

img

உம்மன்சாண்டி உடல்நிலையில் முன்னேற்றம்

திருவனந்தபுரம், பிப்.9-  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற் பட்டுள்ளதால் அவரை உட னடியாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியதில்லை என்று அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். வெண்டிலேட்டர் கருவியின் உதவியுடன் உம்மன் சாண்டி சுவாசித்து வந்தார். புதன்கிழமை யன்று இக்கருவி அகற்றப்பட்டுவிட்டது என்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு இயல்பு நிலைக்கு வந்துள்ளது என்றும் நிம்ஸ் மருத்துவமனை வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர் பேசுகிறார். கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகி டாக்டர் மஞ்சுதம்பி கூறினார்.  புதன்கிழமை மாலை, முன்பு சிகிச்சை பெற்று வந்த பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அவர்  விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  உம்மன் சாண்டிக்கு உரிய சிகிச்சை அளிப்பதில் அவரது குடும்பம் அக்கறை காட்ட வில்லை என்று நாற்பதுக்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் முதலமைச்சர் பினராயி விஜயனி டம் புகார் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்க தாகும்.