states

img

திருச்சூர் பூரம் விழா தொடங்கியது

திருச்சூர், மே 10- உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா அலங்கார யானைகள் அணிவகுப்புடனும் செண்டை மேள வாத்திய முழக்கத்துடனும் செவ்வாயன்று (மே 10) தொடங்கியது. கேரளத்தின் கண்களும் காதுகளும் திருச்சூரை நோக்கி திரும்பியுள்ளன. உலகின் மிகப்பெரிய ஒலி, தாளம் மற்றும் காட்சி அதிசயத்திற்கான இடமாக திருச்சூரின் தேக்கிங்காடு மாறியுள்ளது. பெருந்தொற்றிலிருந்து தப்பிய மக்கள் சாதி,  மத பேதமின்றி ஒற்றுமையாக பூரம் நகரில் ஒன்றுதிரண்டனர்.

யானை மிரண்டதால் பரபரப்பு

பூரம் நகருக்கு அழைத்து வரப்பட்ட மச்சத் தர்மன் என்கிற யானை, ஸ்ரீமூலை அருகே வந்தபோது மிரண்டு ஓடியது. செல்பேசி கேமராக்களோடு மக்கள் யானையை பின்தொடர்ந்து ஓட, யானை மேலும் மிரண்டது. சிறிது நேரம்  பதற்றம் நிலவிய போதிலும், யானைப்பாகன் உரிய நேரத்தில் தலையிட்டதால் யானை அமைதியானது. போலீசார் மற்றும் அமைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை கட்டுப்படுத்தினர்.