திருவனந்தபுரம், நவ.21- விளையாட்டு வீரர்களின் உற்சாகத்தை உயர்த்து வதன் மூலம் இந்த உலகக் கோப்பையை அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வாழ்த்தினார். கால்பந்து ரசிகருமான கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் குறிப்பில் தெரிவித்துள்ள தாவது: கத்தாரில் அரங்கேறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நாடு (கேரளம்) கொண்டாடி வருகிறது. கால்பந்தாட்டத்தின் மீது மலையாளிகளின் காதல் அனைவரும் அறிந்ததே. பீலே, மாரடோனா, பிளாட்டினி, பெக்கன்பவுர் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டத்தால் கொழுந்துவிட்டு எரிந்த கால்பந்து காய்ச்சல் இன்று மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் போன்ற திறமையான நட்சத்திரங்கள் மூலம் அபரிமிதமாக வளர்ந்துள்ளது.
கோழிக்கோடு புள்ளாவூரில் உள்ள குறுங்காட்டு கழிமுகத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்-அவுட்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன. இதுதொடர்பான விவாதங்கள் அனைத்து பொது இடங்களிலும் சூடுபிடித்துள்ளது. நட்புப் போட்டிகள், பேரணிகள் என எண்ணற்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. உலகக் கோப்பை போட்டியை கத்தார் நடத்து வது மலையாளிகளுக்கு மிகவும் உற்சாகமான விஷயம். கத்தார் அதிக எண்ணிக்கையிலான மலையாளி களை கொண்ட நாடு. உலகத்தரம் வாய்ந்த கால்பந்து போட்டிகளை காண நமது கால்பந்து பிரியர்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. எமது புலம்பெயர் சகோதரர்கள் உலகக் கோப்பைக்கான ஏற்பாடுகளிலும் ஏனைய கட்டு மானப் பணிகளிலும் பங்குகொண்டுள்ளனர். அவர்களின் வியர்வையை உணர்த்துவதும் இந்த தருணமாகும்.
அந்த வகையில் இது கேரளாவின் உலகக் கோப்பையும் கூட. பிடித்த அணிகள் மோத தயாராக உள்ளன. உற்சாகமும் ஆரவாரமும் சத்தமாக வளரட்டும். விளையாட்டு வீரர்களின் உற்சாகத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் இந்த உலகக் கோப்பையை அனை வரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும். கால்பந்து போட்டிகள் எந்த பாகுபாடும் இல்லாமல் உலகில் உள்ள அனைவராலும் ரசிக்கப்படுகின்றது. இதயங்களில் பதிவு செய்யப்படுகின்றன. அதன்மீது எதிர்வினையாற்றுவதும் குறுகிய விஷக் கதிர்களை ஊடுருவச் செய்வதும் நெறிமுறையற்றது. கால்பந்து பிரியர்கள் இதுபோன்ற அனைத்து முயற்சி களையும் நிராகரிப்பார்கள். இந்த உலகக் கோப்பையை விரிவான முறையில் தயார் செய்த கத்தாருக்கும், அதன் பின்னணியில் பணியாற்றிய கேரளத்தவர்க்கும் வணக்கம். பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துக்கள் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.