திருவனந்தபுரம்:
கேரளத் தலைநகரான திருவனந்தபுரம்மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களாக இந்த முறை சிபிஎம்நியமித்த இளம் பெண்கள் நாட்டின் பெருமைமிக்க நட்சத்திரங்கள். ஐந்து இடங்களில், 25 வயதிற்குட்பட்டவர்கள் தலைவர்களாக தேர்வாகி சிறப்புப் பெற்றுள்ளனர்.
*****************
ஆர்யா ராஜேந்திரன் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வாகி இருக்கும் ஆர்யா, நாட்டின் இளைய மேயர் என்ற நற்பெயரைப் பெற்று வருகிறார். 21 வயதான ஆர்யா, முடவன் முகள் வார்டில் கவுன்சிலராக உள்ளார். ஆர்யா இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணித மாணவி, பாலர் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும், எஸ்எப்ஐ மாநிலக் குழுஉறுப்பினராகவும், சிபிஎம் கேசவ்தேவ் சாலைகிளை உறுப்பினராகவும் சிறந்து விளங்கியவர்.
*****************
ரேஷ்மா மரியம் ராய் (பத்தனம்திட்டா)
மாநிலத்தின் மிகவும் இளைய பஞ்சாயத்துத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் அருவப்புளத்திலிருந்து ரேஷ்மா மரியம் ராய்.ஊட்டுப்பாறா வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யுடிஎப் 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த அருவப்புளத்தில், ரேஷ்மா தலைவராகி உள்ளார். இவர் சிபிஎம் ஊட்டுப்பாறா கிளை உறுப்பினர், டிஒய்எப்ஐ மாவட்டக் குழு உறுப்பினர், எஸ்எப்ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளை வகிக்கிறார். ஊட்டுபாறா துண்டியம்குளத்தைச் சேர்ந்த ராய் டி மேத்யூ -மினி ராய் ஆகியோரின் இளைய மகளாவார்.
*****************
ராதிகா மாதவன் (பாலக்காடு)
மலம்புழா பஞ்சாயத்தின் தலைவராக இருபத்தி மூன்று வயது ராதிகா மாதவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொல்லங்குந்நு காலனியைச் சேர்ந்த மாதவன் மற்றும் சாந்தாவின் மகள். பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். ஆனக்கல் பழங்குடியினர் பள்ளியில் தற்காலிக (கெஸ்ட்) ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
*****************
அனஸ் ரோஸ்னா ஸ்டெபி (வயநாடு)
இருபத்தி மூன்று வயது அனஸ் ரோஸ்னாஸ்டெபி வயநாட்டில் உள்ள பொழுதனபஞ்சாயத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இக்னோவில் (இந்திரா காந்தி தேசியதிறந்தவெளி பல்கலைக்கழகம்) பேரழிவு மேலாண்மையில் முதுநிலை பட்டம் படித்து வருகிறார். எல்டிஎப் சார்பில் பொது ஒதுக்கீட்டின் கீழ் உள்ள வார்டில் போட்டியிட்டு அனஸ் ரோஸ்னா வென்றார். பொழுதன சுகந்தகிரி சடச்சிக்குழியைச் சேர்ந்த சுனில் மற்றும் சுஜாவின் மகளாவார்.
*****************
சாருதி (கோழிக்கோடு)
கோழிக்கோட்டின் ஒலவண்ணா கிராம பஞ்சாயத்து தலைவராக 22 வயதான சாருதி பொறுப்பேற்பார். பொது மக்களுக்கான சேவைகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் சாருதி,புல்லட் பயணம் செய்வதன் மூலம் கவனத்தைஈர்த்தார். அவர் இறுதி ஆண்டு சட்ட மாணவியாவார். இரிங்கலூரில் ரேசன் கடை பொறுப்பாளர் கோவிட்டில் பாதிக்கப்பட்டபோது கடையின் பொறுப்பை எடுத்துக் கொண்டதற்காக பாராட்டப்பட்டார். ஒலவண்ணா முதலாவது வார்டில் வெற்றி பெற்ற இவர் சிபிஎம் இரிங்கல்
லூர் கிளை உறுப்பினர். பரசேரி மனோகரன், எம்.ரஜீனா ஆகியோரது மகள்.
*****************
வரலாறு படைத்த ரேஷ்மா
அருவப்புளம் பஞ்சாயத்து தலைவர் ரேஷ்மா, மாநிலத்தின் இளைய பஞ்சாயத்து தலைவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 21 வருடம் இரண்டு மாதங்கள் மட்டுமே கொண்ட ரேஷ்மா மரியம் ராயை பஞ்சாயத்து தலைவராகசிபிஎம் நியமித்துள்ளது.ரேஷ்மா நவம்பர் மாதம்வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு முந்தைய தினத்தில்தான் 21 வயதை எட்டினார். ஊட்டுபாறா வார்டை வென்றபோது ரேஷ்மா கேரள உள்ளாட்சி வரலாற்றில் இடம்பெற்றார்.