திருவனந்தபுரம், ஜுலை 24- மாநில அரசுகளை மூச்சு விட அனு மதிக்காமல் ஒன்றிய அரசு நிதி நெருக்கடி யில் தள்ளி இருக்கிறது என நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். இது ஏகபோகங்களின் நலன்களுக்கு சாதகமான நவடிக்கையாகும். மாநிலத்தின் வரிவிதிப்பு அதிகாரத்தை ஒன்றிய அரசு பறிக்கிறது. கூட்டுறவு மற்றும் கூட்டாட்சியில் அரசின் பங்கு வலுப்படுத்தப் பட வேண்டும். ‘மாநிலங்களுக்கு மத்திய அரசு கொடுக்கிறது’ என பிரச்சாரம் செய்யப்படுகிறது. கொடுப்பது அல்ல, பகிர்வது ஒன்றிய அரசின் கடமை. மையத்தில் இருந்து பெறப்பட்ட அனைத்து உதவிகளும் 30 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. மாநிலங்கள் மீது பெரும் சுமை சுமத்தப்படுகிறது. குறிப்பாக கேரளா மீது. கேரளா தனது சொந்த வருவாயை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஒன்றிய அரசின் செஸ் வரி 10 சதவிகிதத்தில் இருந்து 23 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை யெல்லாம் முறியடித்து, வளர்ச்சிப் பணிகள், நலத்திட்டங்களை செயல்படுத்தி கேரளா முன்னேறி வருகிறது. கடன் வாங்கும் வரம்பை குறைத்து கேரளாவை ஒன்றிய அரசு துன்புறுத்தினாலும் அனைத்து துறைகளிலும் நாம் முன்னிலையில் இருப்பது பெருமைக்குரிய விசயம் என தெரிவித்தார்.