திருவனந்தபுரம், ஜுலை 25- அரசியல் ஆதாயத்திற்காக கிஃபியின் உயர் அதிகாரிகளை அமலாக்க இயக்குநரகம் வேட்டையாடுகிறது. முன்னாள் தலைமைச் செயலாளர் உட்பட கிஃபி அதிகாரிகள் தொடர்ச்சி யாக விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். கொச்சியில் உள்ள அலுவலகத்திற்கு வரும் பெண்கள் கூட, நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப உடல் மற்றும் மன ரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கப்படு கிறார்கள். கிஃபி மசாலா பத்திரத்திற்கு யாரை யாவது காரணம் சொல்ல வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. சட்ட விரோதமாக எதுவும் இல்லாத வழக்கில் கைது நாடகம் அரங்கேறுவது தெளிவாகிறது.
முன்னாள் தலைமைச் செயலாளரும், செபி வாரிய உறுப்பினர் தலைமை நிர்வாக அதிகாரி யுமான டாக்டர். கே.எம்.ஆபிரகாமிடம் மூன்று முறை விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் ஆஜ ராகுமாறு அனுப்பிய நோட்டீஸில், காரணம் அல்லது விசாரணையின் பொருள் குறிப்பிடப்பட வில்லை. கூட்டு நிதி மேலாளரிடம் ஏற்கனவே நான்கு முறை விசாரணை நடத்தப்பட்டது. தேவை யான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு, இந்த அதிகாரி மீண்டும் கொச்சி அலு வலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளார். மசாலா பத்திரக் கோப்புகளை கையாண்ட கீழ்மட்ட அதிகாரிகளிடமும் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் அழைக்கப்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து, முன்னாள் நிதியமைச்சரும், கிஃபி துணைத் தலைவருமான டி.எம்.தாமஸ் ஐசக்கும் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். சட்ட சிக்கல் இல்லாத மசாலா பத்திரம் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் மசாலா பத்திரங்கள் குறித்து அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தவில்லை. என்எச்ஏஐ (3000 கோடி), என்டிபிசி (4000 கோடி), ஐஆர்இடிஏ (1950 கோடி) போன்றவை இதில் அடங்கும். பெமாவின் கீழ் அனைத்து அனுமதி களையும் பெற்ற பிறகு மசாலா பத்திரங்கள் மூலம் கிஃபி ரூ.2150 கோடி வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுள்ளது. அத்தகைய சாதனையை எட்டிய முதல் அரசு நிறுவனம். இது சர்வதேச அளவில் கிஃபியின் மதிப்பையும் நிலையையும் உயர்த்தியது. லண்டன் மற்றும் சிங்கப்பூர் பங்குச் சந்தைகளில் வெற்றிகரமான பட்டியலுடன், கிஃபி நிதி திரட்டலுக்கு உறுதி யளிக்கப்பட்டது. இதைத் தகர்ப்பதே அமலாக்க இயக்குநரகத்தின் அரசியல் நகர்வு.
பொதுக் கணக்கையும் ஒன்றிய அரசு சீர்குலைத்தது
மாநிலத்தை பொருளாதார ரீதியாக நசுக்க கருவூல சேமிப்பு வங்கிக் கணக்கு உள்ளிட்ட பொதுக் கணக்கு பரிமாற்றத்தில் ஒன்றிய அரசு நுழைகிறது. மொத்த கடன் வரம்பை நிர்ணயிக்க, பொதுக் கணக்கில் மீதமுள்ள தொகையை சேர்க்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது. பொது முதலீடு, சிறு சேமிப்பு திட்ட இருப்பு மற்றும் கருவூல சேமிப்பு வங்கி கணக்கு வைப்பு ஆகியவை இதில் அடங்கும். மாநிலங் களின் பொதுக் கணக்குகளை சட்டப்படி ஒழுங்கு படுத்தும் அரசமைப்பு அதிகாரம் மாநிலங் களுக்கு உண்டு. இந்த உரிமையை பறித்து மாநிலத்தை நிதி ரீதியாக திணறடிப்பதுதான் ஒன்றிய அரசின் நடவடிக்கை. கடந்த ஆண்டு இறுதியில் பொதுக் கணக்கில் இருந்து அரசு ரூ.15,907 கோடி தற்காலிகக் கடனாகப் பெற்றுள்ளது. புதிய முடிவு அமல்படுத்தப்பட்டால், இந்தக் கடனும் பொதுக் கடனின் கீழ் வரும். ஒன்றிய நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கு கடன் வாங்கும் அதிகாரத்தை குறைத்து மற்றொரு உத்தரவை பிறப்பித்துள் ளது. இதன் மூலம், கிஃபி, பென்ஷன் நிறுவனம் உள்ளிட்ட எஸ்பிவிகளின் கடன்களும் மாநிலத்தின் பொதுக் கடனில் சேர்க்கப்படும். ஒன்றிய அரசின் எந்த நிறுவனங்களுக்கும் இதே போன்ற கடன் வாங்கும் முறை பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனுடன், மாநி லத்தின் பொதுக்கடன் பெறும் அதிகாரமும் ஒரு புறம் வெட்டப்பட்டு வருகிறது. மாநிலங் களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, கேரளாவில் நடக்கும் வளர்ச்சி பணிகளை தடுக்க குழிபறிப்பதே இதன் நோக்கம்.
ஆர்பிஐயின் பாகுபாடு
மாநில அரசு நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கான வங்கிக் கடன்களையும் கட்டுப்படுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இது சாத்தியக்கூறு இடைவெளி நிதி மூலம் திட்டத்தை மேற்கொள்வதற்கான மாநில அரசின் உரிமை யை நீக்குகிறது. மாநிலத்தின் அனைத்து முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கும் இது முக்கிய நிதி ஆதாரமாக உள்ளது. இந்த வழியை மூடுவதன் மூலம் வளர்ச்சியைத் தடுக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கியும் துணை நிற்கிறது.