திருவனந்தபுரம், மே 23- ஒன்றிய அரசு பெட்ரோல் டீசல் மீது 12 முறை உயர்த்திய வரியை, மோடி அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.எம்.தாமஸ் ஐசக் கூறியுள்ளார். இதுகுறித்து முகநூல் பதிவில் அவர் கூறியுள்ள தாவது: பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் மீதான மத்திய வரி ரூ.9.48 ஆகவும், டீசலுக்கு ரூ.3.56 ஆகவும் இருந்தது. ஆனால், மோடி அரசு பெட்ரோல் மீது ரூ.26.77, டீசல் மீது ரூ.31.47 என 12 முறை வரி உயர்வு செய்துள்ளது. இந்த கடும் விலைவாசி உயர்வுக்கு பிறகும் பெட்ரோல், டீசல் மீதான உயர்த்தப்பட்ட வரியை முழுமையாக திரும்பப் பெற ஒன்றிய அரசு தயாராக இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.12.27, டீசல் மீது லிட்ட ருக்கு ரூ.10.47 என மோடி அரசு உயர்த்தியுள்ள வரிகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். இதில் இருந்து கவனத்தை திசை திருப்ப, வரியை உயர்த்தாத மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என ஒன்றிய நிதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு, உணவு தானிய ஏற்றுமதி குறைவு, சமையல் எண்ணெய் இறக்குமதி குறைவு, நிலக்கரி தட்டுப்பாடு போன்றவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள். ஆனால், இந்தப் பிரச்சனை களுக்குத் தீர்வு காண்பதில் ஒன்றிய அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை. அத்தியாவசியப் பொருட் களின் விநியோகத்தில் அரசு தலையிட்டால், பண வீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தலாம். இது கேரளாவின் அனுபவம். அகில இந்திய அளவில் நுகர்வோர் விலைக் குறியீடு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்த நிலையில் கேரளாவில் 5 சதவீதமாக மட்டுமே இருந்தது.
பண வீக்கம் எதனால்?
பணவீக்கத்திற்கு என்ன காரணம்? எளிமையான பதில், கிடைப்பதை விட அதிகமாக தேவைப்பட்டால் விலை உயரும். தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையால் பணவீக்கம் ஏற்படுகிறது. எனவே, பணவீக்கத்திற்கான காரணம் தேவையின் பக்க மாகவோ அல்லது விநியோகத்தின் பக்கமாகவோ இருக்கலாம். தேவை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என்பது இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்க ளின் மனநிலையாக உள்ளது. அதனால்தான் தேவையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முறை வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. பணப்புழக் கத்தை இரண்டு மடங்கு குறைக்கும் வகையில், வங்கி யில் வைத்திருக்க வேண்டிய பண இருப்பு அதிகரிக்கப் பட்டது. இந்த நடவடிக்கைகள் பொருளாதாரத்தில் பணப் புழக்கத்தை குறைக்கும், தேவையை கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் ஓரளவு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், பொரு ளாதார வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். ஏனென் றால், தற்போதைய பணவீக்கத்தின் மூலகாரணங்கள் வழங்கல் பக்கத்தில் உள்ளன. விலையை உயர்த்துவ தற்குப் பதிலாக, தேவை சுருக்கப்படுவதால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து விலையை உயர்த்துகின்றன. உற்பத்திச் செலவு அதிகரித்து வருவதால் பணவீக்கத் தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை பயனுள்ளதாக இருக்காது. அதற்கு, இருப்பை அதிகரிக்க வும், உற்பத்தி செலவைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.