states

img

வெளிநாட்டுப் பயணம் நிறைவு: கேரள முதல்வர் நாடு திரும்பினார்

திருவனந்தபுரம், ஜுன் 20- அமெரிக்கா, கியூபா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு 12 நாள் பயணம் மேற்கொண்ட முதல்வர் பினராயி விஜயன் செவ்வாயன்று (ஜுன் 20) காலை நாடு திரும்பினார். தனது பயணத்தின்போது, அந்நாடு களின் அமைப்புகள் மற்றும் தலைவர்களு டன் சந்திப்புகளை நடத்தி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அமெரிக்காவில் நடந்த உலக கேரள சபாவின் மண்டல மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், வெளி நாடு வாழ் கேரள மக்களுடனும் சந்திப்பு நடத்தினார். நியூயார்க்கில் உள்ள தேம்ஸ் சதுக்கத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். ஐ.நா தலைமையகத்திற்கும் முதல்வர் சென்றார். அமைச்சர் கே.என்.பாலகோபால், சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர், தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் உள்ளிட்டோரும் முதல்வருடன் சென்றிருந்தனர். அமெரிக்கப் பயணம் முடிந்து கியூபா வந்த முதல்வர் ஹவானாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கியூபா அரசு மற்றும் முக்கிய தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விளையாட்டு மற்றும் சுகாதாரத் துறைகளில் கேரளாவுடன் ஒத்துழைக்க கியூபா அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. கேரளா ஸ்டார்ட் அப் மிஷன் இன்ஃபினிட்டி சென்டர் துபாயில் திறக்கப்பட்டது.