states

img

கேரளாவுக்கு எதிரான நடவடிக்கையை முறியடிப்போம்! உயர்கல்வித்துறையைப் பாதுகாப்போம்!

திருவனந்தபுரம், நவ.3- அமைச்சருடனான விருப்பத்தை முடிவு செய்ய இங்கு அமைச்சரவை உள்  ளது என்றும், யாரும் இணை அரசாக மாற முயற்சிக்க வேண்டாம் என்றும் முதல்  வர் பினராயி விஜயன் கூறி னார். மக்கள் எல்லாவற்றுக் கும் மேலானவர்கள் என்  பதை நினைவில் கொள்வது நல்லது. ஆளுநர் ஆரிப்  முஹம்மது கான் நீதித்  துறைக்கும் மேலானவர் என  தன்னை காட்டிக்கொள்வ தாக முதல்வர் கூறினார். கேரளாவுக்கு எதிரான  நடவடிக்கையை எதிர்ப்  போம், உயர்கல்வித்துறை யைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்களுடன் இடது ஜன நாயக முன்னணி தலைமை யிலான கல்விப் பாதுகாப்புக் கூட்டணியை முதல்வர் நவம்பர் 3 வியாழனன்று தொடங்கி வைத்தார். அப் போது அவர் பேசுகையில், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள் கேரளாவில் துணைவேந்  தர்களாக நியமிக்கப்பட்டுள் ளனர்.

அவர்கள் அரசியல்  அடிப்படையில் நியமிக்கப் படவில்லை.  கேரள சட்டப் பேரவை யால் வேந்தர் பதவி வழங்கப்  பட்டது. அந்த நிலையில் பல்  கலைக்கழகங்களை அவ தூறு செய்யும் நிலைப்பாட்டை ஆளுநர் மேற்கொள்கிறார். வேந்தர் என்பது அரசியல்  சாசனப் பதவி அல்ல.  மாறாக, அது பல்கலைக்கழ கத்தின் சட்டப்பூர்வ தகுதி. பல்கலைக்கழக விதிகளின் படி துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கலாம். தனக்கு இல்லாத அதிகாரம் இருப்பதாக நினைத்து துணைவேந்தர்களை பதவி விலகச் சொன்னார் ஆளுநர். இதை நீதிமன்றம் கூட ஏற்கவில்லை. இந்த நட வடிக்கை சட்டப்பூர்வமானது  அல்ல என்பதை இதுவே நிரூ பிக்கிறது என்றார் முதல்வர். மேலும் அவர் கூறுகை யில், கேரளாவின் உயர்கல்  வித்துறையை எந்த சக்தியா லும் தகர்க்க முடியாது. உயர்  கல்வியில் ஏற்பட்டுள்ள முன் னேற்றத்தை எப்படி தகர்ப் பது என்று சில மையங்கள் பார்க்கின்றன. கேரளாவின் வளர்ச்சியால் ஆர்எஸ்எஸ் வருத்தம் அடைந்துள்ளது.  இதன் ஒரு பகுதியாக, பொறுப்பு மிக்கவர்கள் உட்பட, எதிர்ப்பு கள் எழுப்புகிறார்கள். இவர்  களின் ஆதாரமற்ற பிரச்சா ரங்களில் அரசு வீழ்ந்து விடாது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.