states

img

உயரும் மண்ணெண்ணெய் விலை; வதைபடும் மீனவர்கள்

திருவனந்தபுரம், ஜுலை 4- ஒன்றிய அரசு மண்ணெண் ணெய் விலையை உயர்த்திய தால் மீனவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கப்பல்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 35 - 65 லிட்டர் மண்ணெண்ணெய் தேவைப் படுகிறது. மாதத்திற்கு 600-- 1000  லிட்டர். விலை உயர்வுடன் பொது விநி யோகத்திட்டம் மூலம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.102. மத்ஸ்யபெட் (மீன்வளத் துறை) மூலம் ரூ. 142.77 க்கு வழங்கப் படுகிறது. கேரளத்தில் பாரம்பரியத் தொழி லில் 1,67,574 மீனவர்களும், 14,481 எந்திரங்களும் பதிவு செய்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய 73,587 தொழிலாளர்கள் உள்ளனர். மண் ணெண்ணெய் விலை உயர்ந்து அவர் களின் வாழ்க்கையை சீரழித்துள்  ளது. ஒன்றிய அரசு மண்ணெண் ணெய் விலையை உயர்த்தியதுடன் ஒதுக்கீட்டையும் வெகுவாகக் குறை த்து வருகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை மீனவர்களுக்கு மண் ணெண்ணெய் வழங்கப்படவில்லை. ஜூன் மாதத்துக்கானது இதுவரை வழங்கவில்லை. மத்ஸ்யபெட் மூலம் மாதந்தோறும் வழங்கப்படும் மண் ணெண்ணெய் 2196 கிலோ லிட்டர். பொது விநியோகத் துறை மூலம் 2160 கிலோ லிட்டர். ஆறு மாதங்களில், ஒன்றிய அரசு அனுமதித்த மொத்தம் மண்ணெண்ணெய் 2160 கிலோ லிட்டர் மட்டுமே.