நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண் தொடர்பாக பல்வேறு முறைகேடு சம்பவங்கள் அரங் கேறியுள்ளன. இந்த முறைகேடு சம்ப வங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநி லங்களில் நிகழ்ந்துள்ள நிலையில், “இந் தியா” கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக இந் திய மாணவர்கள் சங்கம், காங்கிரஸ் மாணவர் அமைப்புகளின் சார்பில் நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தாலும் பெயரளவில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரு கிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசைப் போல நீட் தேர்வுக்கு எதிராக கேரள அர சும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆளும் கேரள மாநில சட்டப் பேரவையில் அம்மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் ஒருமன தாக புதனன்று நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு முறைகேடு குறித்து ஒன்றிய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என் றும், மருத்துவ சேர்க்கை விவகாரத்தை வழக்கம் போல மாநில அரசு நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.