states

img

இந்தியா அனுபவித்து வரும் சகிப்பின்மைக்கு சமீபத்திய உதாரணம்

திருவனந்தபுரம், ஜுலை 31- புக்கர் விருது பெற்ற கீதாஞ்சலி ஸ்ரீயை சிறப்பிக்கும் நிகழ்ச்சி ஆக்ரா வில் ரத்து செய்யப்பட்டிருப்பது இந்தி யாவில் நிலவும் சகிப்பின்மைக்கு சமீ பத்திய உதாரணம் என்றும், உலகம் போற்றும் எழுத்தாளரை ஆதரிக்கா மல், அவமதிக்கும் நாடாக  நாம் மாறி விட்டோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறினார். கீதாஞ்சலி ஸ்ரீ ,இந்தியில் எழுதிய ரேத் சமாதி என்ற புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஒரு இந்திய மொழிப் புத்தகம் விருது பெறுவது பெருமைக் குரிய தருணமாகும். கீதாஞ்சலிக்கு இந்திய அரசு வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்திய பெண்ணுக்கு வழங்கப்பட்ட இந்த விருதை புறக்கணித்தது. உத்தரப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த கீதாஞ்சலியை அங்குள்ள யோகி ஆதித்யநாத் அரசும் புறக்கணித்தது என்று எம்.ஏ.பேபி கூறினார். அதே நேரத்தில், எழுத்தாளரை அவ மதிக்கும் முயற்சி தற்போது நடந்து வருகிறது.

கீதாஞ்சலியின் புத்தகம் இந்துக் கடவுள்களை அவமதிப்பதாக உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிவன் மற்றும் பார்வதி பற்றிய நாவலின் குறிப்புகள் இந்துக்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாக அவர் வாதிடுகிறார். எதிர்க்கப்பட வேண்டிய விதத்தில், இந்த புதினத்தில் சிவனும் பார்வதியும் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தாரர் கூறுகிறார். இந்த புதினத்தில் சிவன், பார்வதி பற்றிய குறிப்புகள் மிகவும் அருவருப்பானவை என்று கூறி  இந்த வரிகளின் புகைப்படத்தை அவர்  ட்வீட் செய்துள்ளார். முதல்வர் ஆதித்ய நாத் மற்றும் மூத்த காவல் அதிகாரி களுக்கு இந்த ட்வீட் டேக் செய்யப் பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்ற னர்.

மத உணர்வுகளை புண்படுத்திய தாக கீதாஞ்சலி மீது நாளை வழக்கு தொடரலாம். கீதாஞ்சலி படித்த ஜவ ஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், மாணவர்கள் அளித்த வரவேற்பின் போது, சில சாதி அமைப்பினர் பிரச்ச னை செய்தனர். ஆக்ராவில் நடக்க விருந்த நிகழ்ச்சியில் பிரச்சனை ஏற்படும் என்று கருதப்பட்டதால், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்திய புராண ங்களில் இருந்து தான் சிவன் மற்றும் பார்வதியை உருவாக்கியுள்ளதாகவும், அவரது எழுத்துக்கு எதிராக புகார் கூறுபவர்கள் புராணக் கதைகளை நீதி மன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் கீதாஞ்சலி கூறினார். இந்த  புகார் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி யதாகவும் அவர் கூறியுள்ளார். பேச்சு சுதந்திரம் இல்லாத நாடாக  இந்தியா மாறி வருகிறது. குடிமக்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாத எந்த தேசமும் முன்னேற முடியாது என்று எம்.ஏ பேபி பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.