states

img

அர்ஜுன் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறிய பினராயி விஜயன்

கர்நாடகா மாநிலம் ஷிரூர் அங்கோலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன கோழிக் கோட்டைச் சேர்ந்த அர்ஜுனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆறுதல் கூறினார். 

கர்நாடகா மாநிலம் ஷிரூர் அங்கோலாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன கோழிக் கோட்டைச் சேர்ந்த அர்ஜுனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆறுதல் கூறினார். 

அப்பொழுது அர்ஜுனின் குடும் பத்தினர்,”ஞாயிறன்று ஷிரூரில் மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலை யில், அந்த பணி நடைபெறவில்லை. அர்ஜுனை தேட தன்னார்வ நீர் மூழ்கி ஈஸ்வர் மால்பே ஆற்றில் இறங்க அனுமதிக்கப்படாமல், அவர் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி திரும்பிச் சென்றார். இத னால் அர்ஜுனுக்கு என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க வேண்டும்” என கண்ணீருடன் குடும்பத்தினர் தங்க ளது கோரிக்கையை முதல்வரிடம் மனுவாக கொடுத்தனர்.

தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன்,”அர்ஜுனின் நிலைமை தொடர்பாக கர்நாடக அரசிடம் கவலை தெரிவித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்” என நம்பிக் கையுடன் உறுதியளித்தார். இறுதி யாக முதல்வர் அர்ஜுன் மகன் அயனை அன்புடன் அரவணைத்து ஆறுதல் கூறிவிட்டு திரும்பினார். முதல்வருடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் பிரதீப் குமார் உடனிருந்தார்.

முதல்வர் வருகை தங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது

முதல்வர் பினராயி விஜயன்  சென்ற பின்பு அர்ஜுனின் சகோதரி அஞ்சு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,”முதல்வர் வருகை தங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. மாநில அரசின் அனைத்து ஒத்து ழைப்பும் கிடைத்துள்ளது.முதல்வர் தங்களுடன் இருந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். கேர ளத்தில் இப்போது எங்களைப் போல் பலர் அவதிப்பட்டு வருகின்ற னர். அவர்களுக்கெல்லாம் ஆறுதல் அளித்தது போல, எங்களிடமும் நேரில் வந்து முதல்வர் ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது” என கூறினார்.