கொச்சி, மே 7- அதிகாரிகளின் பணி மக்களை முன்னிறுத்தியதாக இருக்க வேண்டும் எனவும், யூடிஎப் கலாச்சாரம் அல்ல எல்டிஎப்-இல் என்பதால்தான் யூடிஎப் கூறும் தீய குற்றச்சாட்டுகளும் இல்லா கதைகளும் மக்களிடம் எடுபடாமல் போகிறது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். எர்ணாகுளம் டவுன்ஹாலில் உள்ள கோடியேரி பாலகிருஷ்ணன் நகரில், கேரள அரசு அதிகாரிகள் சங்கத்தின் (கேஜிஓஏ) 57-ஆவது மாநில மாநாட்டை ஆன்லைனில் துவக்கி வைத்து முதல்வர் மேலும் பேசுகையில், இது வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் இடது ஜன நாயக முன்னணி அரசும் அமைச்சரவை யும் ஆகும். வலதுசாரி ஊடகங்கள் அர சாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சா ட்டுகளையும் கதைகளையும் கூறி தன்னையே கேலிக்கூத்தாக்குகின்றன என்றார். மக்களுக்குப் பொறுப்பான அரசியல் கட்சிகளின் வேலையை ஐக்கிய ஜன நாயக முன்னணியும் பாஜகவும் செய்ய வில்லை. அவர்கள் இருவராக இருந்தா லும், ஒரே இரத்தம் கொண்டவர்கள். மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளைத் தடுக்கும் ஒருவகையான மனநிலை கொண்டவர்கள். எந்த நெருக்கடியிலும் வளர்ச்சித் திட்டங்களில் தோல்வியடைய மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதால்தான் இ.ஜ. முன்னணி மக்களால் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பொய்யான குற்றச்சாட்டுகள் என்ற புகையை உருவாக்குவதன் மூலம் எதையும் தடுக்க முடியாது.
ஊழலற்ற மாநிலமாக...
மின் ஆளுமை உள்ளிட்டவற்றின் அமலாக்கத்தின் செயல்திறன் அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளில் பிரதிபலிக்கிறதா என்பதை தீவிரமாக ஆராய வேண்டும். அரசின் செயல்திறன், பயன்பாடு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை மேம்படுத்த மின்-ஆளுமை செயல்படுத்தப்படுகிறது. அதை மக்கள் பயன்பெறும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஊழலையும் ஒழிக்க முடியும். நாட்டிலேயே மிகக் குறைந்த அளவில் அதிகாரிகளின் ஊழல்களைக் கொண்ட மாநிலம் கேரளா. தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி ஊழலற்ற மாநிலத்தை உருவாக்க வேண்டும். கோப்புகள் நிலுவையில் இருக்கக் கூடாது. அதாலத் மூலம் கோப்புகள் தீர்வு காணப்பட்டாலும், அவை மீண்டும் பழைய நிலையை நோக்கிச் செல்கின்றன. கோப்புகளை உரிய நேரத்தில் தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அரசின் திட்டங்களின் பயன்களை மக்க ளுக்கு எடுத்துச் செல்வதில் அதிகாரி களுக்கு பெரும் பங்குண்டு. அதிகாரி களின் பணி மக்களை முன்னிறுத்திய தாக இருக்க வேண்டும் என்றார் முதல்வர்.