திருவனந்தபுரம், மார்ச் 31- மக்கள் நீதி மய்யம் கட்சி யின் தலைவர் கமல்ஹாசன் கேரளம் மாநிலம் வடகரா மக்களவைத் தொகுதியின் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் கே.கே.ஷைலஜாவுக்கு வாக்கு கேட்டு விடுத்துள்ள காணொலிச் செய்தியில் புக ழாரம் சூட்டியுள்ளார்.
மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் உள்ள அவரது காணொலியில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலங்கள் கடும் சவாலை சந்தித்து வரும் சூழ்நிலை யில், போராட்டத்தில் சளைக் காத கே.கே.ஷைலஜா போன்ற தலைவர்கள் மக்களவைக்கு வர வேண்டும். நெருக்கடி யான காலங்களில் மக்களு டன் தோளோடு தோள் நிற் கும் மக்கள் சேவகர் நாடாளு மன்றம் செல்ல வேண்டும். இது ஒட்டுமொத்த நாட்டுக் கும் நல்லது.
உலகமே பதைபதைத்தா லும் தன் வலிமையையும், தலைமைத்துவத்தையும் நிரூபித்த தலைவர் கே.கே. ஷைலஜா. 2018-ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவியபோது, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா அலுவலகத்திலி ருந்து அறிவுறுத்தல்களை வழங்கவில்லை. கோழிக் கோட்டில் முகாமிட்டு முன் னுதாரணமாக செயல்பட் டார். கோவிட் காலத்தில் அவ ரது பணி இன்னும் சிறப்பாக இருந்தது. கோவிட் பெருந் தொற்றைக் கட்டுப்படுத்து வதில் நாட்டிற்கு முன்னுதார ணமாக கேரளா திகழ்கிறது. அவரது பணியை உலக சுகா தார நிறுவனம் மற்றும் மத் திய ஐரோப்பிய பல்கலைக் கழகம் பாராட்டி கவுரவித் துள்ளது. சிறப்புப் பிரதிநிதி யாக ஐக்கிய நாடுகள் சபை யால் அழைக்கப்பட்டவர். தன் எண்ணங்களாலும், செயல் களாலும் உலகத்தின் நன் மதிப்பைப் பெற்றவர்.
ஒன்றிய அரசிடம் இருந்து கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள மாநிலங் கள் கேரளம், தமிழ்நாடு. நாடா ளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதற்கு எதி ராக குரல் எழுப்பும் போராட் டத்தில் சளைக்காத கே.கே. ஷைலஜா போன்ற தலைவர் கள் தேவை.
இவ்வாறு அதில் பேசியுள்ளார்.