states

img

கேரள அரசின் காகித நிறுவனத்திற்கு 10 ஆயிரம் டன் அச்சு காகிதம் ஆர்டர்

கொச்சி, ஏப்.13- இந்தியாவின் முன்னணி செய்தித் தாள் நிறுவனங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கரிடம் இருந்து கேரள அரசுக்கு சொந்தமான கேபிபிஎல் நிறு வனம் 10 ஆயிரம் டன்கள் செய்தி  அச்சிடும் காகிதத்துக்கான இரண்டா வது ஆர்டரைப் பெற்றுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்தார். இதுகுறித்து அவரது முக நூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:  நம்பகத்தன்மை பொதுத்துறையின் வலிமை டைனிக் பாஸ்கரிடம் இருந்து முந்தைய ஆர்டரான 5 ஆயிரம் டன்கள் வெற்றிகரமாகவும் திருப்திகரமாகவும் விநியோகம் செய்யப்பட்டதன் விளை வாக தற்போது 10 ஆயிரம் டன்களின் புதிய ஆர்டர் வந்துள்ளது. அதில் மிகவும் மகிழ்ச்சி யும் பெருமையும் அடையலாம். செய்தித்தாள் துறை யில், ஒரு நிறுவனம் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் டன் ஆர்டரைப்பெறு வது அரிது. கேபி பிஎல் அதன் நம்ப கத்தன்மை, சிறப்பு மற்றும் தொழில் முறையை எவ்வாறு நிரூபித்துள்ளது என்பதற்கு இது மற்றொரு எடுத்துக் காட்டு. இறக்குமதி செய்தித்தாள், பஞ்சாப் கன்னா காகித ஆலை மற்றும் ஒரிசாவின் இமாமி மில் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தும் செய்தித்தாள் துறையில், ஒரு ஸ்டார்ட்-அப் முத்தி ரையைப் பதித்திருப்பது சிறிய சாத னை அல்ல. இது கேரள அரசுக்கு சொந்த மான பொதுத்துறையின் வலிமையை பறைசாற்றுகிறது.

தி இந்து, பிசினஸ் ஸ்டாண்டர்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில நாளிதழ்கள், தினத்தந்தி, தின மலர், மாலைமலர், பிரஜாசக்தி போன்ற  பிற மொழிப் பத்திரிகைகள் மற்றும் ஏறக்குறைய அனைத்து மலையாள செய்தித்தாள் நிறுவனங்களுக்கும் கேபிபிஎல் காகிதத்தை வழங்குகிறது. செய்தித் தாள் தரம், காகிதத்தை வழங் குவதில் துல்லியம், போக்குவரத்து/ தளவாடங்களில் சிறந்து விளங்குதல் போன்றவற்றில் கேபிபிஎல் இந்த குறுகிய காலத்தில் கணிசமான வெற்றி யைப் பெற்றுள்ளது. செயலிழந்த மத்திய பொதுத்துறை நிறுவனமான எச்பிபிஎல் நிறுவனத்தை கேரள அரசு கையகப்படுத்தி இந்த  லாபங்களை பதிவு செய்து வருகிறது என்பதை மறந்துவிட வேண்டாம், என அமைச்சர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். பொதுப்பணித்து றை என்பது சுமையல்ல, இந்த நாட்டின் பலம், அதை கேரளா மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.