states

img

மக்களின் பாதுகாப்பும் வாழ்க்கைத் தரமும் மேம்பட்ட புதிய கேரளம்; முதல்வர் உறுதி

கொச்சி, ஜுன் 12- மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் பாது காப்பை உறுதி செய்ய அரசு முயற்சித்து வருவதாகவும், இதன் மூலம் புதிய நவீன கேரளாவாக உயர வேண்டும் என்பதே நோக்கம் எனவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். மிகவும் பாதிக்கப்படக்கூடிய கடலோர மீன வர்களின் உயிர்கள் மற்றும் வாழ்வா தாரங்களைப் பாதுகாக்க மாநில அரசு  முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் கூறினார். கொச்சியில் உள்ள செல்லானம் டெட்ராபோட் கரையோரப் பாது காப்புத் திட்டம் மற்றும் புலிமுட்டு வலை யமைப்பு ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமையன்று (ஜுன் 11) தொடங்கி வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: ஒவ்வொரு பருவமழையின் போதும் கடல் சீற்றத்தால் கேரளா வில் வேதனையை உருவாக்கும் இடம் செல்லானம். மாநிலத்தில் டெட்ரா போட் பயன்படுத்தி முதல் கடல் சுவர் செல்லானத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ரூ.344 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. மக்களின் உயிரையும் வாழ்வா தாரத்தையும் பாதுகாப்பதில் அரசு தலையிடுகிறது என்பதற்கு இது ஒரு  எடுத்துக்காட்டு என்று முதல்வர் கூறினார்.

கடலோரப் பகுதியை கடுமையான கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கடல் சுவர் கட்டப்பட்டது. கடற்கரையோரம் உள்ள 10 ஆபத்தான பகுதிகளில் கரையோரப் பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். ரூ.5,300 கோடி மதிப்பிலான கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இயற்கை பேரிடர்களை எவ்வாறு தடுப்பது மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கப் படும். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும், மீட்புப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் பட்ஜெ ட்டில் ரூ.5.5 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மீனவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உதவும் ‘புனர்கேஹம்’ திட்டத்தின் கீழ் 1,247 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர். நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், ஹைபி ஈடன் எம்.பி ஆகியோர் பேசினர்.