திருவனந்தபுரம், மார்ச் 28 - இ-டெண்டர் போர்ட்டலை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநில தகவல் தொழில்நுட்ப மிஷனுக்கு மீண்டும் தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐ.டி. மிஷனின் கீழ் உள்ள இ-டெண்டர்ஸ் போர்ட்டல், மத்திய நிதி, மின்னணுவியல் மற்றும் செலவினத் துறையின் விருதைப் பெற்றுள்ளது. தேசிய தகவல் மையம் (என்ஐசி) வடி வமைத்த இ-டெண்டர் போர்டல் மூலம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான டெண்டர்கள் வழங்கப்படுகின்றன. குறுகிய காலத்தில் அதிக டெண்டர்களை வெளிப்படைத் தன்மை, செயல்திறன் மற்றும் பிழை யின்றி செயல்படுத்தியதற்காக ஐ.டி மிஷ னுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய தகவல் மைய (என்.ஐ.சி) இயக்கு நர் ராஜேஷ் கெரா இந்த விருதை வழங்கி னார். அவரிடம் இருந்து மாநில தகவல் தொழில்நுட்ப இயக்க இயக்குநர் அனு குமாரி மற்றும் என்ஐசி திட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜி.பீனா ஆகியோர் விரு தினைப் பெற்றனர். தேசிய அளவில் ‘நெஸ்டா’வின் சிறந்த பணிக்கான விருதை தொடர்ச்சியாக இரண்டு முறை பெற்றது. இ-டெண்டர் போர்ட்டலை சிறப்பாக இயக்கியதற்காக ஐ.டி மிஷனுக்கு விருது வழங்கப் பட்டுள்ளது. டெக்னாலஜி சபா விருது, மாபத்தான் திட்ட விருது ஆகியவற்றையும் கேரள ஐ.டி மிஷன் பெற்றுள்ளது. ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பணியின் கீழ் உள்ள தரவு மையம் நாஸ்காம் கிளவுட் உள்கட்டமைப்பு விருதையும் கேரள ஐ.டி.மிஷன் பெற்றது.