states

img

மோடி அரசின் சமீபத்திய பலிகடா டீஸ்டா செதல்வாத்: சச்சிதானந்தன்

திருவனந்தபுரம், ஜுன் 27- மோடி அரசின் பழிவாங்கும் அரசியலின் சமீபத்திய பலிகடா டீஸ்தா செதல்வாட் என்கிறார் கவிஞர் கே.சச்சிதானந்தன். இந்தி யாவில் மனித உரிமைப் பணிகளில் அவர் எப்போதும் முன்னணியில் உள்ளவர். சமீபத்திய ஆண்டுகளில், மனித உரிமை ஆர்வலர்கள் தேசத்துரோகம் அல்லது நிதிக் குற்றங்களுக்காக கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இது அரசமைப்புக்கு எதிரானது. அவசரநிலைச் சட்டம் திணிக்கப் பட்ட நாளில் இந்த கைது நடந்துள் ளது.  தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் அவசர காலச் சட்டத்தின் தொடர்ச்சியே என்கிற மவுனப் பிரகடனமும் கூட இது. இதற்கு எதிராக ஜனநாயகவாதிகள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றார் சச்சிதானந்தன்.