திருவனந்தபுரம், ஜுன் 19- மங்காப் தீ விபத்து தொடர்பாக குவைத் செல்ல சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு அரசியல் அனுமதி மறுத்த ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிராக பிரத மருக்கு முதல்வர் பினராயி விஜயன் கடிதம்எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 2024 ஜூன் 12 அன்று குவைத்தின் மங்காப் நகரில் நடந்த சோகத்தில் உயிரிழந்தவர்களில் பாதி பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் தான் கேரள அமைச்சரவை மாநில அமைச்சரை அனுப்ப முடிவு செய்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். பேரழி வின் அளவு மற்றும் தீவிரத்தை கருத்தில் கொண்டு கேரள சுகாதார அமைச்சர் குவைத்தில் இருப்பது, அவசியம் என முடிவு செய்யப்பட்டது. அப்போது குவைத்தில் இருந்த ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர், பிற அதி காரிகள் மற்றும் இந்திய தூதரகத்துடன் நடவடிக்கை களை ஒருங்கிணைக்க உதவியாக இருந்திருக்கும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உளவியல் ஆதரவையும் நம்பிக்கையையும் உறுதிப் படுத்த இது உதவும். ஆனால், ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து அரசியல் அனுமதி கிடைக்காததால் கேரள சுகாதாரத்துறை அமைச்சரின் குவைத் பயணம் நடைபெறாமல் போனது மிகவும் வருத்த மளிக்கிறது. ஒன்றிய அரசின் அரசியல் அனுமதி மறுப்பு மாநில அரசு என்ற முறையில் தனது பொறுப்புகளை நிறை வேற்றுவதற்கு தடையாக இருப்பதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிப்ரவரி 28, 2023 தேதியிட்ட அமைச்சரவை செயலக அலுவலக குறிப்பாணையின்படி அரசியல் அனு மதிக்கான விண்ணப்பம் செய்யப்பட்டதாகவும், கேரள அமைச்சரவையின் கூட்டு முடிவு புறக்கணிக்கப்பட்ட தாகவும் பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மனுவை பரிசீலிக்கத் தவறுவது கூட்டுறவு கூட்டாட்சியின் சாரத்திற்கு எதிரானது, இது மத்திய மற்றும் மாநில அரசுகள் வளர்ச்சி முயற்சிகள் மற்றும் பேரிடர்களின் போது மக்களுக்கு நிவாரணத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றுபட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசியல் அனுமதி வழங்குவதில் அரசியல் அல்லது அரசியல் சாராத தடைகள் இருக்கக் கூடாது என்ற உண்மையை பிரதமர் புரிந்துகொள்வார் என நம்புகிறேன்.
ஆரோக்கியமான கூட்டுறவு கூட்டாட்சி முறையை உறுதி செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை அவசியம் என்பதால், எதிர்காலத்தில் இதுபோன்ற சமயங்களில் மாநிலங்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பொறுப்புடன் பதிலளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் பிரதமரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
சட்டமன்றத்தில் கண்டனம்
கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்ல ஒன்றிய அரசு அரசியல் அனுமதி மறுத்ததற்கு கேரள சட்டமன்றத்தில் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசனும் கண்டனம் தெரிவித்தனர்.