திருவனந்தபுரம், ஜன.7- அமைதியின்மையின் பள்ளத்தாக் கில் இருந்து ‘கடவுளின் சொந்த நாட் டிற்கு’ வந்தடைந்த அவர்கள், திரு வனந்தபுரம் நகரத்தின் தெருக்கள் அனைவருக்கும் சமமாக திறக்கப் படும் என்பதை அறிவார்கள். விரும் பிய உணவு, உடை, வாழ்வு சாத்தி யமாகும்போது கிடைக்கும் சுதந்தி ரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகி யவற்றை உணர்ந்து கொள்கிறார்கள். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட் டிற்குப் பிரதிநிதிகளாக வந்திருந்த மாதர் சங்கத்தின் காஷ்மீர் மாநிலக் குழு உறுப்பினர்கள் கேசர் சுமன்சர்மா, முபீனா ஆகியோர் மோடியின் வெறும் வார்த்தைகளில்தான் எங்களுக்கு சுதந்திரம் உள்ளது என்கிறார்கள். சிறப்பு உரிமைகள் நீக்கப்பட்டதை அடுத்து காஷ்மீரில் பதற்றம் நீடிக்கி றது. ஆண்- பெண் பாகுபாடு, குடும்ப வன்முறை, சுரண்டல், வரதட்சணை பிரச்சனைகள் தீவிரமடைந்துள்ளன. சிக்கிம் உள்ளிட்ட எல்லைப் பகுதி களில் ஒன்றிய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு எங்கும் பாதுகாப் பின்மை நீடித்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு ஆஷா, அங்கன்வாடி மற்றும் ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதப் பலன்கள் மறுக் கப்படுகின்றன. திட்டப் பணியா ளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 கிடைக்கும். பணக்காரர்கள் என்று முத்திரை குத்தி அவர்களுக்கு பிபிஎல் கார்டு மறுக் கப்படுகிறது. ஓய்வூதியப் பலன்கள் இல்லை. நாட்டில் பெண்கள் எதிர் கொள்ளும் முக்கியப் பிரச்சனை களை தீர்ப்பதில் சிபிஎம் முன்னணி யில் உள்ளது. மாதர் சங்கம் தற்போது ஒரு தற்கா லிக அமைப்பாக உருவாக்கப்பட்டுள் ளது. திரும்பிச் சென்ற உடன் தீவிர நட வடிக்கையை தொடங்குவோம் என் றார். மாநிலக் குழு உறுப்பினர்களான சுனிதா பகத், லத்திபா ஆகியோர் மற்ற இரு பிரதிநிதிகள். கேசர் சுமன் சர்மா, முபீனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்.