திருவனந்தபுரம், ஏப்.5- எலத்தூர் ரயில் எரிப்பு வழக் கில் குற்றம் சாட்டப்பட்ட ஷாரூக் சைபியை மகாராஷ்டிரா போலீ சார் கைது செய்தனர். தாக்குத லின் போது தீக்காயம் அடைந்த குற்றவாளி ரத்தினகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். செவ்வா யன்று இரவு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட் டார். ஞாயிறன்று (ஏப்.2) இரவு, ஆலப்புழா - கண்ணூர் எக்சிகி யூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிக்குள் இருந்த பயணிகள் மீது, உ.பி.யைச் சேர்ந்த ஷாரூக் சைபி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இத்தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். கைது செய்யப்பட்ட போது, குற்ற வாளியின் உடலில் தீக்காயங் கள் இருந்தன. ரயிலில் இருந்து குதித்ததில் காயம் ஏற்பட்டி ருக்கலாம் என்றும் சந்தேகிக் கப்படுகிறது. ரத்னகிரி ரயில்வே போலீசின் காவலில் இருந்த ஷாரூக் கேரளா ஏடிஎஸ் குழுவினரிடம் ஒப்படைக்கப் பட்டார். தில்லியில் ஷாஹீன் பாக் சென்ற காவல்துறையினர் ஷாருக் சைஃபி வீட்டில் சோதனை நடத்தினர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்த மலப்புரம் குற்றப்பிரிவு எஸ்பி விக்ரமன் தலைமையில் அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நிய மித்துள்ளது.சட்டம்-ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி எம்.ஆர்.அஜித் குமார் மேற்பார்வையில் விசா ரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக உ.பி., நொய்டாவில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலை யில், மகாராஷ்டிராவில் ஷாரூக் சைபி கைது செய்யப்பட்டார். டிஜிபி அனில் காந்த் இலத்தூர் ரயில் எரிப்பு வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை டிஜிபி அனில்காந்த் உறுதி செய்தார். அவர் கூறுகையில், மகா ராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் சிறப்பு புலனாய்வு குழு வினால் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கர வாதத் தடுப்புப் படை, தேசிய அமைப்புகள் மற்றும் மகா ராஷ்டிரா காவல்துறை ஆகி யவை குற்றவாளிகளைப் பிடிக்க உதவின. குற்றம் சாட் டப்பட்ட ஷாரூக் சைஃபி விரை வில் கேரளாவுக்கு அழைத்து வரப்படுவார். தாக்குதலுக் கான காரணம் குறித்து விசா ரிக்கப்பட்டு வருவதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.