states

img

கலாமண்டலம் பல்கலை வேந்தராக மல்லிகா சாராபாய் பொறுப்பேற்பு

திருவனந்தபுரம், ஜன. 7- பிரபல நடனக் கலைஞர் டாக்டர் மல்லிகா சாராபாய் கேரள கலாமண்டலம் தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜனவரி 6 வெள்ளியன்று பொறுப்பேற்றார். முன்னதாக முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் ஆகியோரை சந்தித்தார். கலைஞர்கள், கலாச்சார பணியாளர்கள் மற்றும் கலாச்சார நிறுவனங்களுக்கு அதிகபட்ச ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கும் மாநிலமாக கேரளம் விளங்குகிறது என்று அவர் கூறினார். கேரளாவின் இந்த நிலைப்பாடு இன்றைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பொருத்தமானது. கேரள கலாமண்டலம் சமவாய்ப்புக்கான உண்மையான கலைச் சூழலைக் கொண்ட ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு சென்று சர்வதேச கலாச்சார பரிமாற்ற மையமாக மாற்ற முயற்சிப்போம் என்றார். சிறந்த பாரம்பரியம் கொண்ட கலாமண்டலத்தின் வேந்தர் பதவிக்கு என்னை அழைத்த கேரள அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேரள அரசின் அழைப்பை பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று மல்லிகா சாராபாய் கூறினார். மல்லிகா சாராபாய் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அறிவியலின் தந்தை என புகழப்படும் விக்ரம்  சாரபாய், உலகப்புகழ்பெற்ற நாட்டிய கலைஞர் மிருளாளினி சாராபாய் ஆகியோரது மகளாவார். இவர் குஜராத்தில் உள்ள ஐஐஎம் நிறுவனத்தில் எம்பிஏ படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.