திருவனந்தபுரம், நவ. 9- கேரளத்தில் புற்றுநோய் சிகிச்சை துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகா தாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரி வித்தார். தலசேரி மலபார் புற்றுநோய் மையம் (எம்சிசி) குழந்தைகளின் கண்களைப் பாதிக்கும் ரெட்டினோபிளாஸ்டோமா என்ற புற்றுநோய்க் கான நியூரோ சர்ஜிக்கல் ஆன்காலஜி மற்றும் சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் ஆர்சிசியில் அரசுத் துறையில் முதன்முறையாக லுடீடியம் சிகிச்சை துவக்கப்பட்டது. மேம்பட்ட சிகிச்சை முறைகளை அளிப்பதன் மூலம் இந்த இரண்டு புற்றுநோய் மையங்களும் கவனம் பெற்றுள்ளன. மாநிலத்தின் புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளுக்காக புற்று நோய் பராமரிப்பு போர்டல் சமீபத்தில் அமைக்கப் பட்டது. சுகாதாரத் துறையின் ‘அல்ப்பம் ஷ்ரத்தா ஆரோக்கியம் உறுதி’ என்னும் பிரச்சா ரத்தின் ஒரு பகுதியாக சுமார் 40 லட்சம் பேர் வாழ்க்கை முறை நோய்களுக்கான அபாயத்தை பரிசோதித்தனர்.
இந்த போர்டல் மூலம் 2.60 லட்சம் பேர் புற்றுநோய் மருத்துவ பரிசோத னைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். மலப்புறத்தில் உள்ள எம்சிசி, ரெட்டினோ பிளாஸ்டோமா உள்ளிட்ட கண் புற்றுநோய் களுக்கான சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. இது பச்சிளம் குழந்தைகளின் கண் களில் மிகவும் பரவலானது. இந்த புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், பார்வை மற்றும் உயிரை பாது காக்க முடியும். ரெட்டினோ பிளாஸ்டோமா வுக்கான விரிவான, மேம்பட்ட சிகிச்சை வசதிகள் மாநிலத்தில் முதல் முறையாக செயல்படுத்தப் பட்டது. இதனால் வெளி மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நிம்மதி கிடைக்கும். அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் குழந்தைகளின் புற்றுநோய்க்கான விரி வான சிகிச்சையை இலவசமாக வழங்கு வதற்கான வசதிகளை எம்சிசி வழங்கியுள்ளது.
சிகிச்சை முறைகளில் லேசர் சிகிச்சை, கிரையோதெரபி மற்றும் கீமோதெரபி மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் கதிர்வீச்சு மற்றும் நேரடி கண் சிகிச்சை ஆகியவை அடங்கும். ரெட்டினோபிளாஸ்டோமா சிகிச்சைக் கான கீமோதெரபியில் சிஸ்டமிக் கீமோதெரபி, இன்ட்ராடெரியல் கீமோதெரபி, இன்ட்ராவிட்ரி யல் கீமோதெரபி மற்றும் சப்டெனான் கீமோதெரபி ஆகியவை அடங்கும். ஒரு நரம்பியல் அறுவைசிகிச்சை புற்று நோயியல் பிரிவு எம்சிசி-யில் தொடங்கப் பட்டது. மூளை மற்றும் முதுகெலும்பு புற்று நோய் மற்றும் பிற கட்டிகளுக்கான அறுவை சிகிச்சை முறையும் எம்சிசி-யில் துவங்கி யது. இதற்கான மேம்பட்ட வசதிகளை எம்சிசி பெற்றுள்ளது. இந்த சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஸ்ரீசித்ர திருநாள் மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நம்பி யிருந்த நோயாளிகளுக்கு இது ஆறுதலைத் தரும். குழந்தைகளுக்கான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு காப்பு அறுவை சிகிச்சை, மூளைக் கட்டி அறுவை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றுக்கான வசதிகளையும் எம்சிசி கொண்டுள்ளது. ஆர்சிசியின் அணு மருத்துவப் பிரிவில் லுடீடியம் சிகிச்சை தொடங்கப்பட்டது. நியூரோஎண்டோகிரைன் கட்டிகளின் சிகிச்சைக்கு லுடீடியம் சிகிச்சை குறிக்கப்படு கிறது. கேரளாவில் அரசுத் துறையில் இந்த வசதி முதன்முறையாகக் கிடைக்கிறது. இது தொடர்பான கேலியம் ஜெனரேட்டர் இந்த மாத இறுதியில் ஆர்சிசியில் இயக்கப்படும்.