பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட செயல்பாட்டுச் சிறப் பை மதிப்பிடுவதன் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புக் குறியீடு தயா ரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பாது காப்புக் குறியீடு தொடர்பான தேசிய அள விலான தரவரிசை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது வழக்கம் என்ற நிலை யில், கடந்த ஆண்டைப் போலவே 2024ஆம் ஆண்டுக்கான தேசிய உணவுப் பாதுகாப்புக் குறியீடு தரவரிசையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான விருதை தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் இருந்து கேரள மாநில உண வுப் பாதுகாப்பு ஆணையர் அப்சானா பர்வீன் பெற்றார்.
40 பிரிவுகளில் முதலிடம்
உணவுப் பாதுகாப்பு துறையின் அம லாக்க செயல்பாடுகளான உணவு பாது காப்பு ஆய்வுகள், மாதிரி சேகரிப்பு, மாதிரி ஆய்வுகள், புகார்கள் பரிசீலனை, என்ஏ பிஎல் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்க ளின் எண்ணிக்கை, ஆய்வகங்களில் பரி சோதனைத் திறன், நடமாடும் ஆய்வ கங்களின் செயல்பாடு, உணவு நிறுவ னங்களின் ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து அளித்த பயிற்சிகள், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு செயல் பாடுகள் போன்ற சுமார் 40 வகையான செயல்பாடுகளின் திறனில் கேரளம் தேசிய உணவு பாதுகாப்புக் குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ளது.