ஏ.கே.ஜி. மையம் மீது தாக்குதலுக்கு கண்டனம்
திருவனந்தபுரம், ஜுலை 2- கேரளத்தில் எளிய மக்களின் அர்ப்ப ணிப்பாலும், வியர்வையாலும் கட்டப் பட்ட இயக்கம் மற்றும் அதன் தலைமை யகம் அரசியல் எதிரிகளின் தாக்குத லுக்கு உள்ளாகியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலு வலகமான ஏகேஜி மையம் மீது நடத் தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலால், மாநிலம் முழுவதும் கோபம் கொண்ட மக்கள் போராட்டங்களில் கட்சி ஊழி யர்களுடன் கரம்கோர்த்து அணிவகுத்த னர். எதிர்க்கட்சிகளின் வெடிகுண்டு அர சியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஜனநாயகவாதிகளும் கலாச்சார உலக மும் ஒருமித்த குரலில் கோரியுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டு வெடிப்பு வியாழக்கிழமை இரவு 11.25 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தலை வர்களை ஆபத்தில் ஆழ்த்துவதை நோக் கமாகக் கொண்ட ஆசாமி, சிறிது நேரத் தில் வெடிகுண்டை வீசிவிட்டு ஸ்கூட்டரில் தப்பிச் சென்றான். உடனே கட்சி தலை வர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஏகேஜி மையத்தில் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண் டர்களின் கூட்டம் அலைமோதியது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின், கொலையாளிகள் விரைவில் பிடிபடு வார்கள் என காவல்துறையினர் தெரி வித்தனர்.
இந்த தாக்குதலுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, முதல்வர் பினராயி விஜயன், சிபிஐ மாநிலச் செயலாளர் கானம் ராஜேந்தி ரன் உள்ளிட்ட தலைவர்கள், கலாச்சார ஆர்வலர்கள், இளைஞர், மாணவர் சமு தாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். மாநிலம் முழுவதும் காலை முதலே ஆர்ப்பாட்டம், பேரணி, கூட்டங்கள் நடத்தப்பட்டன. கட்சி விடுத்த அழைப் பின்படி போராட்டம் அமைதியாக நடந் தது. எல்டிஎப் முன்வைத்துள்ள புதிய கேரளம் என்னும் லட்சியங்கள் மாநில மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள் ளன. இதை பொறுத்துக்கொள்ள முடி யாத யுடிஎப், பாஜக, எஸ்டிபிஐ போன்ற இடதுசாரி எதிர்ப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்குகின்றனர். இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி தாக்குதலை எதிர் கொள்ள எல்டிஎப் முடிவு செய்துள்ளது.
சிறப்புக் குழு விசாரணை
இந்நிலையில், ஏகேஜி சென்டர் மீது நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 14 பேர் கொண்ட சிறப்புக் குழு விசாரணையைத் தொடங்கியுள் ளது. திருவனந்தபுரம் டிசிஆர்பி உதவி ஆணையர் ஜே.கே.தினில் தலைமை யிலான குழு விசாரித்து வருகிறது. டிசிபி டாக்டர். ஏ. நசீம் விசாரணை அதிகாரி யாக உள்ளார். ஏகேஜி சென்டர் ஊழி யரின் புகாரின் பேரில் கண்டோன் மெண்ட் காவல்துறையினர் இந்த வழக்கு பதிவு செய்தனர். வியாழன் இரவு 11.20 மணியளவில், அடையாளம் தெரியாத ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் வெடிகுண்டு களை வீசினார் என முதல் தகவல் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகேஜி அரங்கத்துக்கான வாயில் அருகில் இருந்து வெடிகுண்டு வீசப்பட்டதாகவும் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436 மற்றும் வெடிபொருள் சட்டம் மூன்று ஏ ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. வெடிகுண்டு வீசியவர்கள் திரும் பும் காட்சிகள் ஏகேஜி மையத்தின் சிசிடிவி யில் உள்ளது. இது உட்பட அப்பகுதி யில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. தாக்குதல் நடத்தியவர் பயணித்த வாகனத்தை கண்டுபிடிப்பதே முதல் முயற்சியாகும். சேகரிக்கப்பட்ட காட்சி களில் ஸ்கூட்டரின் எண் தெளிவாக இல்லை. கொலையாளிக்கு வேறு யாரிட மாவது உதவி கிடைத்ததா என்பது குறித் தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஒன்றரை நிமிடத்தில் நடந்த தாக்குதல்
ஏகேஜி மையம் மீது வெடி குண்டு வீசி தாக்குதல் நடத் திய நபர் ஒன்றரை நிமிடத்தில் திட் டத்தை செயல்படுத்திவிட்டு திரும்பி யதை சிசிடிவி காட்சிகள் உறுதிப் படுத்தியுள்ளன. முறையான பயிற்சி யுடனும் திட்டமிடலுடனும் நடத்தப் பட்ட தாக்குதல் என்ற மதிப்பீட்டுக்கு காவல்துறை வந்துள்ளது. இது போன்ற விஷயங்களைக் கையாளும் பயிற்சி பெற்றவர்களே வன்முறைக் குப் பின்னால் இருப்பதாக காவல் துறையின் சந்தேகிக்கின்றனர். இரவு 11.23 மணியளவில் மர்ம நபர் ஸ்கூட்டரில் ஏகேஜி மையம் முன் வந்தார். ஸ்கூட்டரை நிறுத்தி குண்டை கையில் எடுத்து வீச அவ ருக்கு ஒரு நிமிடம் 32 வினாடிகள் மட்டுமே ஆனது. பாளையம் பக்கத் தில் இருந்து வரும்போது வலது பக்கம் ஏகேஜி மையம் அமைந்துள் ளது. அதை ஒட்டியுள்ள குன்னுகுழி சாலையில் இருந்து மர்ம நபர் ஸ்கூட்டரில் வந்துள்ளார். வன்முறைக் குப் பிறகு, அவர் அதே வழியில் தப்பிச் சென்றார். தாக்குதலின் போது, மற் றொரு இருசக்கர வாகனம் வேக மாக வந்தது. அதில் வந்தவர் வாக னத்தின் வேகத்தை குறைத்து நிறுத்தி யுள்ளார். மீண்டும் வாகனத்தை இயக்கி குன்னுகுழி நோக்கி சென்றுள் ளார். இந்த வாகனத்தில் வந்தவருக் கும் வன்முறையில் தொடர்பு உள் ளதா என்பது குறித்தும் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்ற னர். முதல்வர் பினராயி விஜயன், எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் இ.பி. ஜெயராஜன் உள்ளிட்டோர் ஏகேஜி மையத்துக்கு நேரில் சென்று குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்ட னர்.