திருவனந்தபுரம், டிச.17- கேரளத்தின் முதல்வர் ஆவதற்கு கனவு கண்ட மெட்ரோமேன் இ. ஸ்ரீதரன், தீவிர அரசிய லிருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். அத்துடன், பாலக்காடு தோல்வியில் இருந்து தான் பாடம் கற்றதாகவும், கொள்கை மற்றும் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தாத வரை கேரளத்தில் பாஜக உருப்படாது என்றும் அவர் சாபம் விட்டுள்ளார். பாஜக-வின் தேசிய செயற்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சில நாட்களி லேயே இ. ஸ்ரீதரன், கட்சிக்கு குட்பை சொல்லியி ருப்பது பாஜக-வினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கேரளத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்த லில் 35 தொகுதிகளில் வெற்றிபெற்று வி. முரளீ தரன் தலைமையில் ஆட்சியில் அமர்வது(!) பாஜக-வினரின் திட்டமாக இருந்தது. இதற்காக ரூ. 400 கோடியைக் கொட்டி வேலைபார்த்து வந்த னர். ஆனால், பாஜக தேசிய தலைமையானது, 90 வயது என்ஜீனியரான ‘மெட்ரோமேன்’ இ. ஸ்ரீத ரனை திடீரென முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதனை எதிர்பாராத வி. முரளீதரன், கே. சுரேந்தி ரன் ஆகியோர் தலைமையிலான பாஜக கோஷ்டி கள் அதிருப்தி அடைந்தனர்.
அதேநேரம் ஸ்ரீதர னின் அரசியல் அனுபவமின்மையை பயன்ப டுத்தி அவரை ஏமாற்றினர். மெட்ரோ ஸ்ரீதரனின் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி விட்டு, பாலக்காடு தொகுதியில் அவரது காலையே வாரி விட்டனர். 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எம்எல்ஏ கூட ஆக முடியாமல் மெட்ரோ ஸ்ரீதரன் தோற்றுப் போனார். பாஜக-வினர் தன்னை ஏமாற்றி யதையே தேர்தலுக்குப் பின்னர்தான் ஸ்ரீதரன் உணர்ந்தார். இந்நிலையில்தான் வியாழனன்று (டிச.16) செய்தியாளர்களை சந்தித்த மெட்ரோ இ. ஸ்ரீத ரன், கேரளாவில் பாஜக உருப்படாது என்றும், கட்சி கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் தேவை என்றும் கூறியுள்ளார். “மாநிலத் தலைமையுடன் பல கருத்து வேறு பாடுகள் உள்ளன. இதே முறையில் தொடர முடி யாது. தேவையான மாற்றத்தைப் பற்றி விரிவா கச் சொல்ல நான் விரும்பவில்லை. தேர்தல் தோல்வியில் ஏமாற்றம் இல்லை. ஆனால் அதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு அரசி யல்வாதியாக அல்ல, ஒரு அதிகாரியாக போட்டி யிட்டேன். இனி தீவிர அரசியல் வேண்டாம் என முடிவு செய்திருக்கிறேன். எனினும், பாஜக தேசி யக் குழுவில் சிறப்பு அழைப்பாளராக தொடர் வேன்” என அறிவித்துள்ளார். கேரள அரசு கேட்டுக்கொண்டால், ‘கே ரயில்’ திட்டத்தில், தனது ஒத்துழைப்பை வழங்கவும் தயார் என்று மெட்ரோ ஸ்ரீதரன் கூறியுள்ளார்.