ஆலப்புழா, டிச.19- பாஜகவின் ஓபிசி மோர்ச்சா மாநில செயலா ளர், எஸ்டிபிஐ மாநிலச் செயலாளர் ஆகியோர் அடுத்தடுத்து ஆலப்புழாவில் கொல்லப்பட்ட நிலையில் அங்கு பதற்றம் நிலவுகிறது. பாஜகவின் மிகவும் பிற்பட்டோர் அமைப்பான ஓபிசி மோர்ச்சாவின் மாநில செயலாளர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், வழக்கறிஞருமான இவர் ஞாயிறன்று (டிச.19) காலை நடைப்பயிற்சிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் முன் வந்த ஒரு கும்பல் அவரை தாக்கி வெட்டிக் கொன்றது. சனியன்று இரவு ஆலப்புழாவில் உள்ள மண் ணஞ்சேரியில் காரில் வந்த ஒரு கும்பலால் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ். ஷேன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மற்றொரு கொலையும் நடந்துள்ளது ஆலப்புழயில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. முதல்வர் கடும் கண்டனம் ஆலப்புழாவில் நடந்த இரு கொலைகளுக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். குற்றவாளிகள் மற்றும் அவர்க ளுக்கு பின்னால் உள்ளவர்களை கைது செய்ய காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இத்தகைய கொடூரமான, மனிதாபிமான மற்ற வன்முறைச் செயல்கள் நாட்டுக்கு ஆபத்தா னவை. கொலையாளி கும்பலையும் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையையும் கண்டறிந்து தனிமைப்படுத்த அனைத்து மக்களும் தயாராக இருப்பார்கள் என்பதில் உறுதியாக இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.