states

img

கேரள சுகாதார பல்கலைக்கழகத்தின் ஆறு கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கம் போட்டியின்றி தேர்வு

திருவனந்தபுரம், ஜுன் 1- கேரளத்தில் சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சங்கத் தேர்தலில் வேட்புமனு பரிசீலனை முடிந்ததும் திருவனந்தபுரம் வஞ்சியூர் பகுதியில் உள்ள 6 கல்லூரிகளிலும் இந்திய மாணவர் சங்கம் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி தலைவராக எஸ்எப்ஐ வஞ்சியூர் பகுதி கமிட்டி உறுப்பினர் அசின் ஷாவும், ஆயுர்வேத கல்லூரி யில் எஸ்எப்ஐ பகுதி கமிட்டி உறுப்பினர் விஸ்வநாத்தும் தலைவர்களாக தேர்வு செய்யப் பட்டனர். பல் மருத்துவக் கல்லூரி மாணவர் சங்க தலைவராக பகுதி கமிட்டி உறுப்பினர் விமல் ஜோஸ் தேர்வு செய்யப்பட்டார். செவிலியர் கல்லூரியின் தலைவியாக என்.எஸ்.அமலாவும், மருந்தியல் கல்லூரியில் நுவைத்தும், எம்.எல்.டி கல்லூரியில் பர்வேஸும் தலைவர்களாக பொறுப் பேற்றனர். மருத்துவத்துறை கல்லூரி மாண வர்கள் நடத்திய மகிழ்ச்சி ஊர்வலத்தை எஸ்எப்ஐ  மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எல்.நிரஞ்சன் துவக்கி வைத்தார்.