states

img

கேரளாவில் ‘அனைவருக்கும் இணையம் திட்டம்’

கடந்த வாரத்தில் கேரளா இடது ஜன நாயக முன்னணி அரசு ‘அனைவ ருக்கும் இணையம்’ என்ற கனவை நன வாக்க, கே ஃபோன் திட்டத்தை நமது தேசத்தின் முதலாவது மாநிலமாக அறி முகம் செய்தது. இதன் வாயிலாக நமது நாட்டில் சொந்தமாக இணைய சேவை வழங்கும் முதல் மாநிலமாக கேரளா திகழ்கிறது. முந்தைய தனது ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பினராயி விஜ யன் தலைமையிலான அரசு ‘இணையம் மக்களின் உரிமை’ என்று அறிவித்தது. அதன்படி தகவல் தொழில் நுட்ப ஏற்றத் தாழ்வைக் குறைக்கும் நோக்கில் அதிக வேக இணைய சேவைகளை அனைத்து  வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களு க்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி யுள்ளது. இத்திட்டத்தின் முதல் பகுதி யாக மாநில அரசு சுமார் 30,000 அரசு அலுவலகங்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 14000 குடும் பங்களுக்கு இணைய வழி சேவையை வழங்கவுள்ளது. கடந்த ஜூன் 5 அன்று துவங்கப்பட்ட அனைவருக்கும் இணை யம் திட்டம் தற்போது 17,412 அரசு அலுவல கங்கள் மற்றும் 2,105 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் 9000 வீடுகளுக்கு வழங்கவும் தேவைப்படும் கேபிள் நெட்வொர்க் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது செயல்படுத்தப்படும் கே ஃபோன் திட்டம் பொதுத்துறையை வலுப் படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் பங்களிப்பு என்று முன் வைக்கப்படுகிறது. இதன் பயன்களை தனியார் துறையினரும் பெரும் வகை யில் இக்கட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் இடதுசாரி அரசின் ‘வளர்ச்சிக்கான மாற்று மாடல்’  என்ற அடிப்படையில் முன்னிறுத்தப்பட்டுள்ள இத்திட்டம், தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்கள் கிராமப்புறங்களில் குறைந்தளவு கட்டமைப்பு வசதிக ளையே கொண்டு செயல்பட்டு வரும் நிலையில், அவை வெறுமனே லாபத்தின் அடிப்படையில் செயல்படும் நிலையில், அவை கிராமப்புறங்களில் தொலைத் தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த ஆர்வம் காட்டாத நிலையில், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கே ஃபோன் நிறுவனம் வாயிலாக சுமார் 20 லட்சம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இணைய வசதி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

முதல் கட்டமாக சுமார் 14,000 வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவசமாக அதிவேக இணைய வழி சேவை வழங்கப்பட்டுள் ளது. மேலும் கேரளா மாநிலத்தில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தலா 100 குடும்பங்கள் தற்போது தேர்வு செய்யப் பட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் பட உள்ளது. தற்போது கே ஃபோன் என்பது மாநில மற்றும் ஒன்றிய அரசு இணைந்து செயல்படுவதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஒன்றிய அரசின் தகவல் தொடர்புத்துறை புதியதாக இணைய  வழி சேவைகளை வழங்கும் உரிமையை கே ஃபோன் நிறுவனத்திற்கு வழங்கி யதை தொடர்ந்து புதிய டிஜிட்டல் ஃபைபர் ஆப்டிக் வசதிகள், தகவல் தொடர்பு கோபுரங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு கட்டமைப்பு வசதிகளை உரு வாக்கி மாநில அரசு குறித்த காலத்திற் குள் தனது இலக்கை அடைய முடிந்தது. தற்போது செயல்படுத்தப்படும் இப் புதிய ‘இணையம் மக்களின் உரிமை’  என்ற முழக்கத்துடன் கூடிய செயல்திட்டம் கேரள மாநிலத்தை நமது நாட்டின் அறிவு சார் பொருளாதாரத்தை நோக்கிய வளர்ச்சியில் முதல் மாநிலமாக மாற்றும் முயற்சியை துரிதப்படுத்தும்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தலையங்கம், தமிழில் : பேரா.தி.ராஜ்பிரவின்