திருக்காகரை, மே 13- திருக்காக்கரையில் வியாழனன்று (மே 12) எல்டிஎப் தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு வந்த கே.வி.தாமஸுக்கு எல்டிஎப் அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் சால்வை அணிவித்தார். கூட்டத்தினர் ஆரவாரம் செய்து முழக்கமிட்டனர். சிறிது நேரம் பேச்சை நிறுத்திவிட்டு முதல்வர் கே.வி.தாமஸை வரவேற்றார். மேடையில் முதல்வரை கடந்து சென்ற கே.வி.தாமஸ், சாலை நெரிசலால் தாமதம் ஏற்பட்டது என்றும், இதனால்தான் கே ரயில் போன்ற திட்டம் தேவைப்படுகிறது என்றும் முதல்வரிடம் கூறிவிட்டு தன் இருக்கைக்குச் சென்றார். வளர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டும் அரசு இது என்றும், பினராயி விஜயனுடன் நிற்பதில் பெருமைப்படுவதாகவும் கே.வி.தாமஸ் பேசும்போது குறிப்பிட்டார். பிரச்சாரத்தில், எல்டிஎப் வேட்பாளர் டாக்டர்.ஜோ ஜோசப் உள்ளிட்டோர் பேசினர்.
கேரள மாநிலம் திருக்காக்கரை தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் டாக்டர் ஜோ ஜோசப்பை வாழ்த்துகிறார் முதல்வர் பினராயி விஜயன். உடன் பேராசிரியர் கே.வி.தாமஸ்.