நாகர்கோவில், ஜுன் 26- தமிழ்நாடும் கேரளாவும் பெண் ஆதரவு மாநிலங்கள் என்று பி.கே.ஸ்ரீமதி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தக்க லையில் ஞாயிறன்று மாலை பெண்ணுரி மை பாதுகாப்பு சிறப்பு மாநாடு எழுச்சி யுடன் நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற இம்மாநாட் டில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பின ரும் கேரள மாநில முன்னாள் அமைச்சரு மான பி.கே.ஸ்ரீமதி பங்கேற்று உரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது: பெண் சமத்துவம் அல்லது சமநிலை என்பது பல நூற்றாண்டுகளாக உலக மெங்கும் உள்ள பெண் சமூகம் வலி யுறுத்தி வருவதாகும். ஆண்-பெண் சமத்துவம் என்பதை இந்திய சமூக அமைப்பில் நம்மால் எதிர்பார்க்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. அது தேவையானது என நாம் கூறுகையில், 140 கோடி மக்களைக் கொண்ட நமது நாட்டில் பெரும்பாலானவர்கள் தேவை யில்லை என்கிறார்கள் என்பதை மறைத்து வைக்க விரும்பவில்லை.
நமது நாடு விடுதலை பெற்று 76 ஆவது ஆண்டை கொண்டாட உள் ளோம். நமது வீடுகளிலும், சமூகத்திலும், அதிகார தளத்திலும், ஆட்சி மட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் என்கிற நிலை யிலும் நமது சகோதரர்களுக்கு இணை யாக சமவாய்ப்பு நமக்கும் தேவை. வீடு களில் சமத்துவம் உள்ளதாக நம்மால் கூறிவிட முடியாது. அசமத்துவம்தான் நிலவுகிறது. ஆண்-பெண் அசமத்து வம் என்பது இந்தியாவில் வறுமையைப் போல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பட்டினி இல்லை. இங்கு ரேசனில் இலவசமாக அரிசி கிடைக்கிறது. கேரளத்திலும் இப்போது பட்டினி இல்லை. ஆனால் வட இந்திய மாநிலங்களில் நிலைமை அப்படி இல்லை. ஒரு வேளை உணவுக்குகூட வழி வகுக்காத பல மாநிலங்கள் நமது நாட்டில் உள்ளன. வறுமையில் மக்கள் வாடு கிறார்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வடமாநிலங்களில் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து குடிநீர் எடுத்துவரும் நிலை உள்ளது. மகாத்மா காந்தி வேலை உறுதி சட்டத்தின் கீழ் வேலை செய்பவர்கள் பெண்கள். 2004-இல் மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது அரசு மகாத்மா காந்தி பெயரிலான இந்த சட்டத்தை நிறைவேற்ற இடதுசாரி கட்சிகள் காரணமாக இருந்தன. குறைந்த சம்பளம் என்றாலும் இது ஏழைகளுக்கு நிவாரணமாக அமைந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டப் பூர்வ உரிமை, சீர்குலைவைச் சந்தித்து வருகிறது. கூலி கொடுக்காமல் ஒன்றிய அரசு மோசடி செய்து வருகிறது.
நமது நாட்டில் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்பு சாசனம் உள்ளது. அதை எழுதும்போது 18 பெண்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த நாட்டின் குடி மக்கள் அனைவரும் சமம் என்று குறிப்பி ட்டனர். அனைவருக்கும் வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தர வேண்டும் என்றார்கள். அனைவருக்கும் வேலையும் கல்வியும் கொடுக்க வேண்டும் என்றார் கள். இவை எதுவும் நடைபெறவில்லை. பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தேசிய நிலை மையில் இருந்து கேரளம் மாறுபட்டது. 1957 வரை தமிழ்நாட்டின் பகுதியாக இருந்தது கேரளத்தின் வடக்கு தெற்கு பகுதிகள். 1957இல் அமைந்த இஎம்எஸ் தலைமையிலான இடதுசாரி அரசு நிலப்பிரபுத்துவத்தை ஒழித்தது. அனை வருக்கும் குடியிருப்புக்கு 10 சென்ட் நிலம் வழங்கியது. 57லும் 67லும் அமைந்த இடதுசாரி அரசுகள் அதில் மாற்றத்தை ஏற்படுத்தின. 57க்கு முன்பு தமிழ்நாட்டை விட வறிய நிலை கேரளத்தில் இருந்தது. அமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதி யாகவும் அணிதிரட்டப்பட்ட மக்களால் அந்த மாற்றம் ஏற்பட்டது. 5 வயதுள்ள ஆண்பெண் குழந்தைகள் அனைவருக் கும் கல்வியை இடதுசாரி அரசு உறுதி செய்தது.
தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பெண்களுக்கு ஆதரவான அரசுகள் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் பெண் கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். கேரளத்தில் அதிக அளவில் ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1600 வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, பாட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கேரளத்தில் குடும்பஸ்ரீ மூலம் வருவாய் ஈட்டி பெண்கள் முன்னேற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஐநா சபை பெண்களுக்கு சம வாய்ப்பளிக்கும் சட்டம் இயற்றுமாறு தெரி வித்துள்ளது. நானும் சகோதரி கனிமொழி யும் நாடாளுமன்றத்தில் அதற்காக போராடினோம். இன்றும் அதற்காக போராடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.