states

img

பெண்ணிய வாசிப்பும் விளக்கமும் காலத்தின் கட்டாயம்: சச்சிதானந்தன்

கோழிக்கோடு, ஜுன் 20- நவீன காலத்தில் பெண்கள் எந்த வகையான படைப்புகளையும் படித்து விளக்கு வது கட்டாயம் என்று சாகித்ய அகாடமி தலைவர் கே.சச்சிதானந்தன் கூறினார். கோழிக்கோட்டில் உள்ள பாலின சமத்துவப் பூங்காவில் ‘பெண்கள் - மொழி, எழுத்து மற்றும் நாடகம்’ பயிலரங்கைத் தொடங்கி வைத்து எழுத்தாளர் சச்சிதானந்தன் பேசினார். அப்போது அவர், பெண்களுக்கு இலக்கியத்திலோ, சமூகத்திலோ, பணியிடத்திலோ தனக்கென தனி இடமில்லை.  பெரும்பான்மையான எழுத்தும் வாசிப்பும் ஆண்களால் தீர்மானிக்கப்படும் மொழி மற்றும் கண்ணோட்டத்தில் செய்யப்படுகிறது. கெடு வாய்ப்பாக, பெண் எழுத்தாளர்களும் ஆண்க ளுக்கான மொழியில் எழுத வேண்டிய நிலை  உள்ளது. அந்த மொழியிலிருந்து விடுதலை பெறும் படைப்புகள் வர வேண்டும். புரா ணங்கள், வரலாறு மற்றும் மத நூல்களை வாசிப்ப தற்கும் விளக்குவதற்கும் பெண்ணிய அணுகு முறையை எடுப்பது எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களின் பணியாகும். விமர்சனங்களி லும் எழுத்துகளிலும் பெண்கள் ஏன் ஒதுக்கப் படுகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மறக்கப்பட்ட எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார். அகாடமி செயலர் சி.பி.அபூபக்கர் தலைமை வகித்தார்.