திருவனந்தபுரம், பிப். 3- ஒன்றிய அரசு கேரளத்துக்கு உரிய நிதியை ஒதுக்க மறுத்து, வளர்ச்சித் திட்டங்களைச் சீர்குலைத்து மூச்சுத் திணற வைத்து கொண்டிருக்கும் வேளையில், கேரளம் வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021-2022-க்கான திட்டக் குழுவின் பொருளாதார ஆய்வு அறிக்கை, கடந்த நிதியாண்டில் கேரளப் பொரு ளாதாரம் வலுவாக மீண்டு வந்ததாகக் கூறியுள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 12.01 சதவீதமாக இருந்தது. 2020 இல் 8.43 சதவீதம். 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகபட்ச வளர்ச்சி விகிதம் என நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் சட்டப்பேரவையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெரும் வெள்ளம் மற்றும் கொரோ னா காரணமாக பின்னடைவைச் சந்தித்த அனைத்துப் பொருளாதாரத் துறைகளும் மீட்சிக்கான பாதையில் உள்ளன. கடந்த ஆண்டு பொருளா தார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. மாநில அரசின் கொள்கைத் தலையீடு களும் ஊக்க நிதி தொகுப்புகளும் வளர்ச்சியை விரைவுபடுத்தின.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகை யில், விவசாயம் தொடர்பான நட வடிக்கைகள் 4.64 சதவீதமும், தொழில்துறை 3.9 சதவீதமும், சேவைத் துறையில் 17.3 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது. முன்னதாக இந்தத் துறைகள் அனைத்தும் சரிவைச் சந்தித்தன. விவ சாயம் மற்றும் அது சார்ந்த துறை களின் வளர்ச்சி முந்தைய ஆண்டில் 4.64 சதவீதமாக இருந்தது. தேசிய வளர்ச்சி மூன்று சதவீதமாகும். மீன்பிடித்தல் - மீன் வளர்ப்பு மற்றும் பயிர் துறையில் வளர்ச்சி முறையே 30.1 சதவீதம் மற்றும் 3.63 சதவீதம். கடந்த ஆண்டு தொழில் துறை யின் வளர்ச்சி விகிதம் 2.82 சதவீதமாக இருந்தது. உற்பத்தி (3.63 சதவீதம்) மற்றும் கட்டுமானம் (2.4 சதவீதம்) ஆகியவையும் சிறந்த வளர்ச்சியைக் கண்டன. நிதி சேவைகளிலும் கொரோனா கட்டுப்பாடுகளிலும் கொண்டு வந்த தளர்வுகள் கட்டுமானத் துறைக்கு நிவாரணமாக அமைந்தன. சேவைத் துறை 14.44 சத வீதத்தில் இருந்து 17.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் பற்றாக் குறை 2.29 சதவீதமாக குறைந்துள் ளது. முந்தைய ஆண்டு 2.51 சதவீத மாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான நிதிப் பற்றாக்குறை விகிதம் 4.57 சதவீதத்தில் இருந்து 4.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2021 இல் பொதுத்துறை வங்கிகளின் கடன் மற்றும் வைப்பு விகிதம் 64.74 சதவீதமாக இருந்தது. இது மார்ச் 2022 இல் 65.85 சதவீதமானது.