states

முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்!

கேரளம் மாநிலம் வயநாட்டிலும், கர்நாடகம் மாநிலத்திலும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி அளவிற்கு காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமையன்று பகல் 12 மணிக்கு 113.96 அடியிலிருந்து 114.81 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு நீர்வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.