திருவனந்தபுரம், டிச. 4- இந்தியாவிலேயே இன்று கேரளாவில் சிறந்த பொதுக் கல்வித் துறை உள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். உருட்டம்பலம் மேல்நிலைப்பள்ளி அய்யன்காளி - பஞ்சமி நினைவு பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்தார். கேரள மறு மலர்ச்சி வரலாற்றில் பஞ்சமியின் பள்ளி நுழைவு ஒரு முக்கியமான நாளாகும். இந்த விழாவுக்கு இன்றும் முக்கியத்துவம் உண்டு. புராணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, புராணங்கள் வரலாற்று நிகழ்வுகளாக சித்தரிக்கப்படும் காலம் இது என்றும் முதலமைச்சர் கூறினார். வரலாற்றை சிறப்பு பிரிவினருக்கு மட்டு மானதாக மாற்ற ரகசிய முயற்சி நடக்கி றது. இதன் ஒரு பகுதியாக வரலாற்று சின்னங்களின் பெயர்களைக் கூட மாற்ற தயாராகி வருகிறது ஒன்றிய அரசு. சாதி பாகுபாட்டை எதிர்த்து போராடிய அய்யன் காளியின் நினைவை அழிக்க இடமளிக் கக்கூடாது என்றும் முதல்வர் கூறினார். பொதுக் கல்வித் துறையில் கேரளா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
கோவிட் கட்டத்தில் கூட, அது முடங்காமல் முன் னேற ஆன்லைன் கல்வி உதவியது. அத் தருணத்தில் அரசும் மக்களும் ஒன்றாக இணைந்து செல்வதைக் காண முடிந்தது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வை நிராக ரித்தாலும், மாநில அரசு தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தியது. 2016இல் இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது பல பள்ளி கள் மூடப்படும் நிலையில் இருந்தன. இன்று இந்தியாவிலேயே கேரளாவில் சிறந்த பொதுக் கல்வித் துறை உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள் ளதாகவும், குழந்தைகள் இடைநிற்றல் இல்லை என்றும் முதலமைச்சர் சுட்டிக் காட்டினார். பள்ளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தற்போது செய்யப் பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாத இடங்கள் ஏதேனும் இருந்தால், அப்பள்ளிகளை உலகத் தரத்திற்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.