states

img

கேரளா: அனைத்து பழங்குடியின கிராமங்களுக்கும் இந்த ஆண்டே டிஜிட்டல் இணைப்பு

திருவனந்தபுரம்,  மே 25- கேரளாவில் உள்ள அனைத்து பழங்குடியினர் கிராமங்களுக்கும் இந்த ஆண்டு டிஜிட்டல் இணைப்பு கொண்டு வரப் படும் என பட்டியலின, பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பிஎஸ் என்எல் அதிகாரிகளுடன் அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 1,284 பழங்குடியினர் கிராமங்களில் 1,073 கிராமங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 211 காலனிகளில் இந்த ஆண்டு இணைப்பு உறுதி செய்யப்படும். 211 காலனிகள் இருந்தாலும், 161 டவர்கள் அமைத்தால்தான் அனைத்து இடங்களிலும் தகவல் தொடர்பு வசதி செய்து தர முடியும் என பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஜூன் 15 ஆம் தேதிக்குள் அனைத்து கிராம குழுக்க ளும் ஒன்றிணைந்து கோபுரத்திற்கான இடங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.  வயநாடு மாவட்டத்தில் சிறப்புத் திட்டமாக உரு வாக்கப்பட்ட டிஜிட்டல் இணைப்பு ஜூலை 15ஆம் தேதிக்குள்  செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் கேரளா சர்க்கிள் மொபைல் நெட்வொர்க் பொது மேலாளர் எஸ்.என்.ரமேஷ் ராஜ், ஏஜிஎம் என்.கே.ராஜீவ், சி-டாக் அசோக். இயக்குநர் பி.எஸ்.சுபோத்  ஆகியோர் கலந்து கொண்டனர்.