கோழிக்கோடு, டிச.20- நாட்டில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்ச ஓய் வூதியம் தொடர்பான சீர்திருத்தத் தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே சிஐடியு எழுப்பிய கோரிக்கை. நிபந்தனை யற்ற குறைந்தபட்ச ஓய்வூதியமாக ஒன்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும். உடனடியாக ரூ.3000 வழங்கப்பட வேண்டும் என பி.எப் ஓய்வூதிய மத்திய அறங்காவலர் குழு உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவருமான ஏ.கே.பத்மநாபன் கூறினார். கோழிக்கோட்டில் நடந்த சிஐடியு கேரள மாநில மாநாட்டில் பங்கேற்று பேசுகை யில் அவர் கூறியதாவது: நீண்ட போராட்டத்துக்குப் பிறகு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 1000 ஆக்கப்பட்டது. ஆனால், நூறாயிரக்கணக்கான தொழி லாளர்கள் இன்னும் குறைவாக, பெயரள விற்கு, ஓய்வூதியமே பெறுகின்றனர்.
இந்த விசயத்தில் சிஐடியுவின் தெளிவான நிலைப்பாடு, பணிக்காலம் உள்ளிட்ட நிபந்தனைகளைப் பொருட்படுத்தாமல் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.2000 வழங்க வேண்டும் என்ற பரிந்துரை அரசால் பரிசீலிக்கப்பட வில்லை. பிஎப் ஓய்வூதியம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஒன்றிய அரசோ அல்லது இபிஎப் அமைப்போ கருத்து எது வும் தெரிவிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 2021-22 நிலவரப்படி, 72,73,795 இபிஎப் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளனர். இதில் 20,44,136 பேர் குறைந்தபட்ச ஓய்வூதி யமாக ஆயிரமோ குறைவாகவோ பெறு கிறார்கள். ஓய்வூதியத்தை அதிகரிப்பது நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது அல்ல. இது குறித்து ஒன்றிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர் மற்றும் மனைவியின் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச ஓய்வூதி யம் போதுமானதாக இருக்க வேண்டும். இதை நிறைவேற்றுவது ஓய்வூதியர் அமைப் புகளின் பொறுப்பு மட்டுமல்ல, பிஎஃப் உறுப்பினர்களும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.