states

img

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் ரயிலுக்கு தீ வைத்து பயணிகளை கொல்ல முயற்சி

தீ வைத்து எரிக்கப்பட்ட ரயில் பெட்டியில் இருந்த பயணிகளின் காலணிகள் மற்றும் பிற பொருட்கள் எரிந்தன.

கோழிக்கோடு, ஏப்.3- ஆலப்புழா - கண்ணூர் எக்ஸிகி யூட்டிவ் ரயிலில் பயணிகளை தீ  வைத்து எரிக்க நடந்த முயற்சியில் 9 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது .  சம்பவம் நடந்த இலத்தூர் பாலம்  அருகே உள்ள ரயில் தண்டவாளத் தில் 3 சடலங்கள் கண்டெடுக்கப் பட்டன. ஞாயிறன்று (ஏப். 2) இரவு 9.10  மணியளவில் ரயில் எலத்தூர் கொர புழா பாலம் அருகே வந்து கொண்டி ருந்தது. அப்போது, டி ஒன் பெட்டி யில் இருந்த பயணி ஒருவர் பெட்  ரோலைத் தெளித்து தீ வைத்தார். இதில் ஒருவரது உடலில் கடுமை யான காயம் ஏற்பட்டது. மேலும்  8 பேருக்கு சாதாரண தீ காயம் ஏற் பட்டது. தீ வைத்த நபர் யார் என அடையாளம் காணப்படவில்லை. அவர் ரயிலில் இருந்து குதித்து தப்பியதாக மற்ற பயணிகள் தெரி வித்தனர். இந்நிலையில், திங்களன்று அதிகாலை 1:30 மணியளவில் மட்ட னூரைச் சேர்ந்த ரஹ்மத், அவரது சகோதரியின் இரண்டரை வயது  மகள் சுஹாரா மற்றும் ஒரு ஆண்  ஆகியோரின் சடலங்கள் தண்ட வாளம் அருகே கண்டெடுக்கப் பட்டன. உடல்கள் மருத்துவக் கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. காயம் அடைந்த 5 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும்,  3 பேர் பேபி மெமோரியல் மருத்து வமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடும் தீக்காயம் அடைந்தவர் கொயிலாண்டியில் உள்ள மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

மற்றொரு பெட்டியில் இருந்து வந்த நபர், எந்தவித தூண்டுதலும் இல்லாமல் பயணிகள் மீது திடீ ரென பெட்ரோல் தெளித்து தீ வைத்து எரித்தார். அருகில் இருந்த  இருக்கைகளில் இருந்த பயணி களின் ஆடைகளிலும் தீ பரவியது.  பீதியடைந்த பயணிகள் மற்ற  பெட்டிகளுக்கு ஓடினர். இதற்கிடை யில் பயணி ஒருவர் சங்கிலியை இழுத்தார். கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை தேடும் பணி தீவி ரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீ சார் மற்றும் ரயில்வே போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்த அனில்குமார் (50), அவரது மனைவி சஜிஷா (47), மகன் அத்வத் (21), மண் ணூத்தி மாநாடு வீட்டைச் சேர்ந்த அஸ்வதி (29), தளிபரம்பு நீலிமா வீட்டைச் சேர்ந்த ரூபி (52) ஆகி யோர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேபி மெமோரியல் மருத்துவமனையில், தளி பரம்பைச் சேர்ந்த ஜோதிந்திரநாத் (34), திருச்சூரைச் சேர்ந்த பிரின்ஸ் (35), கண்ணூரைச் சேர்ந்த பிர காஷ் (34) ஆகியோர் உள்ளனர். மேலும் ஒருவர் கொய்லாண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும்  மாவட்ட காவல்துறை தலைவர் ராஜ்பால் மீனா, ஏசிபி பிஜுராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இரவு எலத்தூர் ஸ்டே ஷனில் உயர் போலீஸ் அதிகாரி கள் கூட்டம் நடந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் தீயணைப்பு படையினரின் உதவியை நாடி னர். உடனடியாக கோழிக்கோடு கடற்கரை மற்றும் கொயிலாண்டி யில் இருந்து தீயணைப்புப் படை யினரும், இலத்தூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

ரயிலில் நடந்த வன்முறை  அதிர்ச்சி அளிக்கிறது: முதல்வர்

இச்சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள கேரள முதல்  வர் பினராயி விஜயன், “விரிவான விசாரணை நடத்தி, குற்றம் குறித்த முழு விவரங்களையும் சட்டத்தின் முன் கொண்டு வரு மாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக சிறப்பு  புலனாய்வு குழு அமைக்கப்படும். கொலையாளியை பிடிக்க போலீ சார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதை மாநில காவல்துறைத் தலைவர் மேற்பார்வையிடுகிறார். ரயில் பயணிகளின் பாதுகாப்பை  உறுதி செய்ய மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும். ஒன்றிய ரயில்வே அமைச்சகம் பயணிகளின் பாதுகாப்பு  விசயத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் அவசரமாக எடுக்கு மாறு கேட்டுக் கொள்ளப்படும். உறவினரை இழந்து வாடும்  குடும்ப உறுப்பினர்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர் களுக்கு தேவையான சிகிச்சை உறுதி செய்யப்படும்” என்றார்.