250 நிறுவனங்கள் ஒப்புதல்
திருவனந்தபுரம், ஜுலை 25- ஐடி பூங்காக்களில் 5000 பேருக்கு பயிற்சியளிக்க 250 நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. நாட்டிலேயே முன்னுதாரணமாக இன்டர்ன்ஷிப் பயிற்சி பெருவோருக்கு மாதம் ரூ.5000 வழங்கி கேரளம் வழி காட்டியுள்ளது. 150க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் அரசின் நிதி உதவியுடன் மாநிலத்தின் ஐடி பூங்காக்களில் இன்டர்ன்ஷிப்பைத் தொடங்கினர். ஒரு மாநிலம் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்துவது நாட்டி லேயே இதுவே முதல் முறையாகும். திருவனந்தபுரம் டெக்னோபார்க், கொச்சி இன்போபார்க், கோழிக்கோடு சைபர்பார்க் ஆகிய இடங்களில் 6 மாதங்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு மாநில அரசால் மாதம் ரூ.5000, நிறு வனங்களால் குறைந்தபட்சம் அதே தொகை வழங்கப்படும். இந்த ஆண்டு 1500 பேருக்கும், அடுத்த ஆண்டு 5000 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படும். பட்ஜெட்டில் இதற்காக ரூ.20 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 250 நிறு வனங்கள் ஏற்கனவே இத்திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. இத்திட்டத்தில் சுமார் 1200 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ள னர். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஐடி அல்லாத நிறுவனங்களில் போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பயிற்சியை தொடர்ந்து வேலை பெறவும் இத்திட்டம் உதவும். ஐசிடி அகாடமி, கேரள ஸ்டார்ட்அப் மிஷன், ஜி டெக், காபிட் போன்றவற்றுடன் இணைந்து ‘இக்னைட்’ என்ற இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்து இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளுக் காக காத்திருக்கும் விண்ணப்ப தாரர்கள் https://ignite.keralait.org என்ற இணைய தளத்தில் இன்டர்ன்ஷிப்பிற்காக பதிவு செய்ய லாம். இன்டர்ன்ஷிப்பிற்கு ஆர்வ முள்ள பகுதிகளைத் தெரிவிக்கலாம். நேர்காணலுக்குப் பிறகு நிறுவனங்கள் அனுமதி வழங்கும்.