திருவனந்தபுரம், பிப். 6- கேரளத்தில் ஏழைகளுக்கு வீடு வழங்கும் லைப் திடடத்தின் இரண்டாம் கட்ட பயனாளிகள் பட்டியலில் 5.5 லட்சம் குடும்பங்கள் இடம்பெற்று ள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்களின் முதற்கட்ட ஆய்வில் 5,09,685 தகுதி யானவை என கண்டறியப்பட்டன. 9,20,260 விண்ணப்பங்களில் ஆய்வு நடத்தப்பட்ட 85.67 சதவிகிதம் பேரில் 64.70 சதவிகிதம் பேர் தகுதி பெற்றனர். ஆய்வு நிறைவடையும்போது பய னாளிகளின் எண்ணிக்கை 5.5 லட் சத்தை எட்டும். கோவிட் காலம் என்ப தால் ஆய்வுப்பணியில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. சூப்பர் செக், புகாருக்கு நிவாரணம் போன்றவற்றுக்கு பிறகு பயனாளிகள் பட்டியலை கிராம சபைகள் இறுதி செய்யும்.
தகுதியற்றவர்களை நீக்கவும், தகுதியானவர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமை யிலான குழு உயர்மட்ட ஆய்வு (சூப்பர் செக்) நடத்தும். உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் அண்மையில் இதற்கான உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வீடு வழங்க வேண்டும் என்பது அரசின் முடிவு. முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றரை லட்சம் பயனாளிகளின் இரண்டரை லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டன. நிலம் உள்ள வீடற்றவர்கள், நில மற்ற வீடற்றவர்கள் ஆகியோருக்கு இரண்டாம் கட்டத்தில் வீடுகள் வழங்கப்பட உள்ளன. நிலம் உள்ள வீடற்றோர் பட்டியலில் 6,41,652 பேரும், நிலமும் வீடும் இல்லாதோர் பட்டியலில் 2,78,608 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதில் முதலாவது பிரிவினரின் 5,54,742 மனுக்களில் 3,30,756 மனுக்களும், இரண்டாவது பிரிவினரின் 2,33,043 மனுக்களில் 1,78,929 மனுக்களும் தகுதியானவை என கண்டறியப் பட்டுள்ளன.
9 வகையான முன்னுரிமை பிரிவினர்
மனநோயால் அவதிப்படுவோர், உடல் தளர்வு நோயால் பாதிக்கப்பட்டோரின் குடும்பம், 40 சதவிகிதத்துக்குமேல் உடல் ஊனம் உள்ளவர்கள், அரியவகை நோய்கள், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர் உள்ள குடும்பம், நோய் அல்லது விபத்து காரணமாக வேலை செய்து வருவாய் ஈட்ட முடியாதவரின் குடும்பம். விதவையை பாதுகாக்கும் குடும்பம், உடல் ஊனத்தால் வருவாய் இன்றி தவிக்கும் குடும்பம், எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளவரின் குடும்பம் ஆகியவை வீடுகள் பெறுவதற்கான முன்னுரிமை பிரிவில் உள்ளனர்.