பாலக்காடு, ஜுன் 20- தென்மேற்கு பருவமழை தொடங்கி 20 நாட்களுக்கு பிறகு கேரளத்தில் 47 சதவிகிதம் மழை குறைவாக பதிவாகி உள்ளது.
ஜூன் 1ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான பருவமழை காலத்தில், கேரளா முழுவதும் 393.9 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 208.1 மி.மீட்டர் மட்டுமே கிடைத்தது. ஆலப்புழா, இடுக்கி மாவட்டங்களில் மழை மிக குறைவாக பெய்துள்ளது. எதிர்பார்த்த மழை பெய்யாததால் விவசாயத் துறையிலும் நெருக்கடி ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இடுக்கியில் போதிய மழையில்லாததால் மின் உற்பத்தியும் பாதிக்கப்படும்.